districts

img

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

பள்ளிபாளையம் மே 10- குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில், ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர். தனியார் தொண்டு நிறுவனம் சிந்தியா பள்ளிபாளையம் கள அலுவலகம் சார்பில், கிராம புற குழந்தைகளுக்கான களப் பயணம் என்ற தலைப்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திர குமார் நிகழ்வினை துவக்கி வைத்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கூடியிருந்த மாணவ மாணவியரிடம் பேசினார். மேலும் வெளியிடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் செல் லும் பொழுது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.  பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் களிடம் கூறினார். மேலும் காவல் நிலையத்தின் தினசரி செயல் பாடு, குறித்த விபரங்கள் மற்றும் காவலர்களின் பணிகள் குறித்தும், குழந்தைகளுக்கான உரிமைகள், காவல் நிலை யத்தில் பொதுமக்கள் எவ்வாறு புகார் மனுவை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கூடியிருந்த மாணவ, மாணவியரிடம் பள்ளிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் எடுத்துரைத்து பேசினார். திட்ட ஒருங் கிணைப்பாளர் இளங்கோவன், பணியாளர்கள் சந்திரமதி, செல்வி, பெலிக்ஸ், அருள் ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.