districts

img

மதிமுக அலுவலகம் இடிப்பு: இடத்தை அபகரிக்க முயற்சி

கோவை, நவ.16- கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகம் உள்ள கட்டிடத்தை, சிலர் சனியன்று திடீரென இடிப்பதற்கான நடவ டிக்கையில் ஈடுபட்டனர். அலுவலகம் செயல்படும் இடத்திற்கு உரிமை கோர யாரும் இல்லாத நிலை யில், இதனை மோசடியாக அபகரிக்க முயற்சிப்ப தாக மதிமுகவினர் குற்றம்சாட்டினர். கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதி யில் 1958 ஆம் ஆண்டு முதல் அனைத்து கட்சியின ரும் வந்து அமரும் வகையில் முத்தமிழ் படிப்பகம் இயங்கி வந்தது. இதனை தொடர்த்து மதிமுக கட்சி  துவங்கபட்ட பிறகு, இந்த முத்தமிழ் படிப்பகம், கோவை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்தின் 28 ஆவது கிளை வட்ட கழகமாக தற்போது வரை இயங்கி வருகின்றது. இதனை, நாராயணசாமி என்பவரிடம் 1958 ஆம் ஆண்டு, வாடகை ஒப்பந்தத்தில் பேசி, 10 முதல் 15 ஆண் டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து வந்தனர்.  இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் னர் நாராயணசாமி உயிரிழந்தார். அவருக்கு வாரிசு கள் யாரும் இல்லாததால். இந்த சொத்துக்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனை அறிந்து  கொண்ட சிலர் கூட்டு சேர்ந்து, கடந்த ஆறு மாதங்க ளுக்கு முன்பு, மதிமுக மாநகர் மாவட்ட செயலா ளர் கணபதி செல்வராசுவிடம், நாங்கள் இந்த  இடத்தை விலைக்கு வாங்கி விட்டதாக தெரிவித் துள்ளனர். இதற்கு அவர், உரிய ஆவணங்களை கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார். இதன்பிறகு யாரும் இந்த இடத்திற்கு உரிமைகோரி வர வில்லை. இந்நிலையில், வெள்ளியன்று இரவு திடீரென  சிலர் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்து  கட்டடத்தின் ஒருபகுதியை இடித்து அகற்றினர். சனியன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த மதி முகவினர் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மதிமுக மாந கர் மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராசு, மதி முக கழக உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்.ஆர். மோகன்குமார், அரசியல் ஆலோசனைக் குழு உறுப் பினர் சேதுபதி, மாநில சட்ட துறைச் செயலாளர் சூரி நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதி முகவினருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியின் பீளமேடு நகரக்குழு செயலாளர் மேகநாதன், நகரக் குழு உறுப்பினர் ஜோதிபாசு, சிபிஎம் 28 ஆவது  மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு உள் ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரும், திமுக மாநகர்  மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் ஆகியோரும் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத் திற்கு வந்த பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர்,  உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் களை கைதுசெய்வதாக உறுதியளித்தனர்.  இதுகுறித்து மதிமுகவினர் கூறுகையில், மதிமுக அலுவலகத்தை இடித்த சம்பந்தபட்ட நபர் களை கைது செய்து, சிறையில் அடைக்க வேண் டும். ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்ய  வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங் களை முன்னெடுப்போம், என்றனர்.