மண்சரிவால் போக்குவரத்திற்கு தடை
மண்சரிவால் போக்குவரத்திற்கு தடை உதகை, ஆக.3- ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் வழி யாக எல்லமலை செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, சாலை சேதமடைந்ததால், அந்த சாலையில் போக்குவரத் திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூரா ட்சிக்குட்பட்ட ஆருற்றுப்பாறை பகுதியில் இருந்து திருவள்ளு வர் நகர் வழியாக எல்லமலை செல்லும் சாலையில் மண்ச ரிவு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது. இச்சாலையில் கனரக வாகனங்கள் சென்றால் சாலை மேலும் சேதமடையும் என்பதால், பேரூராட்சியினர் இப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதனிடையே, வியாழனன்று சாலை சேதமடைந்த பகுதியில் தற்காலிகமாக ரிப்பன் கட்டி அடைக்கப்பட்டிருந்த நிலையில், சில வாகன ஓட்டிகள் அந்த ரிப்பனை கழற்றி விட்டு வாகனத்தை இயக்கி வந்துள்ள னர். இதையடுத்து, மீண்டும் வெள்ளியன்று பேரூராட்சி நிர்வா கத்தினர் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி முற்றிலுமாக போக்கு வரத்தை தடை செய்தனர்.
பழைய இரும்பு கடையில் தீ விபத்து
பழைய இரும்பு கடையில் தீ விபத்து திருப்பூர், ஆக.3- தாராபுரத்தில் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை யாகின. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் புறவழிச்சாலை மேம் பாலம் அருகே உள்ள ஆர்.எஸ்.வி. நகர் பகுதியைச் சேர்ந்த வர் ஸ்ரீபிரபு. இவரது மனைவி ராஜேஸ்வரி, பெஸ்ட் மெட்டல்ஸ் என்ற பெயரில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகின்ற னர். இந்நிலையில், சனியன்று அதிகாலை அந்த கடையில் தீப்பிடித்து மளமளவெனத் எரிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தாராபுரம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட வீரர் கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, தீயை கட்டுப்ப டுத்த முயன்றனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குபின், தீய ணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். இருப்பினும் தீயணைப்பு நிலைய வாக னத்தில் தண்ணீர் தீர்ந்து போனதால், மாற்று ஏற்பாடு செய்வ தற்கு காலதாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு தண்ணீர் லாரிகளை வரவழைத்து அதிலிருந்து தீயணைப்பு வாகனத் திற்கு தண்ணீர் மாற்றப்பட்டு, தீயினை அணைத்தனர். இவ்விபத்தில் கடையிலிருந்த சுமார் ரூ.8 லட்சம் மதிப் பிலான பொருட்கள் தீக்கிரையாகின. இவ்விபத்து குறித்து தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தொடர் கொள்ளை: 4 பேர் கொண்ட கும்பல் கைது
தொடர் கொள்ளை: 4 பேர் கொண்ட கும்பல் கைது கோவை, ஆக.3- கோவையில், தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த பிரின்சஸ் என்ப வரின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வந்தனர். இதில் அப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, ரோகன், விஜய், அபிலேஷ் மற்றும் முபாரக் அலி ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட் டது தெரியவந்தது. இந்த கும்பல் சூலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. மேலும், பல்லடம் பகு தியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் இருசக்கர வாக னத்தையும் திருடிய இந்த கும்பல், வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு அவரது இருசக்கர வாக னத்தை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்நிலையில், காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து, மேற் கண்ட 4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நி றுத்தி சிறையில் அடைத்தனர்.
தண்ணீரில் மூழ்கிய நீரேற்று நிலையம்
தண்ணீரில் மூழ்கிய நீரேற்று நிலையம் சேலம், ஆக.3- தேவூர் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கும் நீரேற்றும் நிலையம் தண்ணீரில் மூழ்கியதால், 24 ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து அதி களவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால், தேவூர் காவிரி ஆற்றங்க ரைப் பகுதிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நி லையில், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளாக வுண்டம்பட்டி ஊராட்சி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகு தியில் சங்ககிரி பேரூராட்சிக்கு செல்லும் குடிநீரேற்று நிலை யத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், சங்ககிரி பேரூராட் சிக்குட்பட்ட 18 வார்டுகள், 24 ஊராட்சி ஒன்றியங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கடனை வசூலிக்க விவசாய நிலங்களை ஏலத்தில் விட முயற்சி
நாமக்கல், ஆக.3- கடனை வசூலிக்க விவசாய நிலங்களை கைப்பற்றி ஏலத்தில் விட முயற்சிக்கும் தனியார் வங்கி மீது நாமக்கல் நுகர்வோர் நீதிமன் றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், தொட்டி யம் அருகே உள்ள கிடாரம் கிராமத் தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (57). இவர், நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், நான் மற்றும் எனது குடும்பத்தினர் கிடாரம் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் விவ சாய நிலத்தின் அசல் ஆவணங் களை கடந்த 2020 ஆம் ஆண்டு அடமானம் வைத்து, நாமக்கல்லில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் (கத்தோலிக் கன் சிரியன் வங்கி) ரூ.50 லட்சம் கடன் பெற்றோம். கடன் விண்ணப் பத்திலும், வங்கியின் சரிபார்ப்பு அறிக்கையிலும், விவசாய கடன் என குறிப்பிடப்பட்டுள்ளது. விவ சாய விளைச்சல் சரியாக இல்லாத காரணத்தால், வங்கியில் ஒப்புக் கொண்டபடி தவணைத் தொகை களை செலுத்த இயலவில்லை. இந் நிலையில், வங்கி நிர்வாகம் சட்டப் படி எங்களது விவசாய நிலத்தை சுவாதீனம் எடுத்து ஏலம் விட உள்ள தாக கடந்த மே மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சி யடைந்து வங்கிக்கு சென்று விவ சாய நிலங்களை சர்பாசி சட்டத் தின் கீழ் ஏலம் விட முடியாது என தெரிவித்தபோது, வங்கி நிர்வா கத்தின் சார்பில் சரிவர பதிலளிக்க வில்லை. மேலும், கடனை புதுப்பிக்க எவ் வித கையெழுத்தும் போடாத நிலை யில், கடன் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களில் மோசடியாக வங்கி நிர்வாகத்தால் கையொப்பம் செய்யப்பட்டுள்ளது. விவசாய கடனுக்காக அடமானம் வைக்கப் பட்ட நிலங்களை விவசாயம் அல் லாத கடன் பெறப்பட்டது என மோச டியாக ஆவணங்களை உருவாக்கி சொத்தை கைப்பற்றி ஏலத்துக்கு விட வங்கி முயற்சிக்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டு மெனவும், வங்கியின் தவறான நட வடிக்கையால் ஏற்பட்ட மன உளைச் சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கில் கோரப்பட்டுள் ளது. இந்த வழக்கை விசார ணைக்கு ஏற்றுக்கொண்ட நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி வீ.ராமராஜ், கடன் வழங்கிய வங்கி யின் கிளை மேலாளரும், உயர் அலுவலர்களும் ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று ஆஜராகி பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். கடனை வசூலிக்க சர்பாசி சட்டத் தின் கீழ், விவசாய நிலங்களை கைப் பற்றி ஏலத்தில் விட வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பகலில் உலா வந்த சிறுத்தைகள்: மக்கள் அச்சம்
உதகை, ஆக.3- குன்னூர் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி அருகே பட்டப்பகலில் உலா வந்த சிறுத்தைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மலைப்பிரதேசமான நீலகிரி 60 சதவிகிதம் வனப் பகுதியை உள்ளடக்கியது. இந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் காணப்படுகின்றன. இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, குடியிருப்புப் பகுதிக்கு வருவது தற்போது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில், குன்னூர் அருகே டைகர் ஹில் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி அருகே பட்டப்பகலில் இரண்டு சிறுத்தைகள் உலா வருவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், அப்ப குதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தற்போது இதுதொ டர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இப்பகுதியில் உலா வரும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி கோவை, ஆக.3- போதைப்பொருள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங் களை தடுக்கும் விதமாக, கோவை மாநகர காவல் துறையி னர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக வும், குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்கும் விதமாக வும் கோவை மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு சைக் கிள் பேரணி சனியன்று நடைபெற்றது. இப்பேரணியை கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், நூற்றுக்கணக்கான போலீசா ரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. முடிவில், போதைப்பொருள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் ஈரோடு, ஆக.3- ஈரோட்டில் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காத 3 நிறுவனங்களை கண் டறிந்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், கடந்த ஜூலை மாதம் தொழிலாளர் சட்டங்களின் கீழ், ஈரோடு மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 இன் கீழ் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 35 கடை களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. மேலும், அரசு தொழிலாளர்களுக்கு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதி யம் வழங்காத 3 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, விளக்கம ளிக்க வேண்டுமெனக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள் ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக.31இல் பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல்
ஆக.31இல் பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல் ஈரோடு, ஆக.3- ஆக.31 ஆம் தேதியன்று ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு மாநகரம், எஸ்.கே.சி. சாலையிலுள்ள மாந கராட்சி நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ் விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ஆக.31 ஆம் தேதியன்று பள்ளி மேலாண் மைக்குழு மறு கட்டமைப்பு செய்ய உறுப்பினர் தேர்தல் நடத்து வது குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மேலாண் மைக்குழு மறு கட்டமைப்பு செயல்முறைகள், வழிகாட்டு தல்கள் உள்ளிட்டவை குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் மைதிலி ஆகியோர் விளக்கமளித்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியர் மல்லிகா நன்றி கூறினார்.
அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி
ஈரோடு, ஆக.3- ஈரோட்டில் அட்மா திட்டத்தின் கீழ் நடை பெற்ற பயிற்சி முகாமில், ஏராளமான விவசா யிகள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட் டாரம், மாணிக்கம்பாளையத்தில் அட்மா திட் டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.பவானி தலைமை வகித்தார். இதில், பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் தாவர பொருள்க ளின் பயன்பாடு குறித்தும். மானிய திட்டங் கள், சம்பா பருவத்தில் சாகுபடி செய்யும் நெல் ரகங்கள், உயிர் உரங்களின் பயன்பாடு, நுண் ணூட்டச்சத்து உரங்கள் பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார் விளக் கமளித்தார். விதை தேர்வு முறைகள், விதை நேர்த்தி, சான்று பெற்ற விதைகளை பயன்ப டுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விதைச்சான்று அலுவலர் நாசர் அலி விளக்கமளித்தார். உழவர் செயலி பயன்படுத் துதல் மற்றும் மானிய திட்டங்கள் விண்ணப் பிக்கும் முறைகள் குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரபாகரன் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும், இப்பயிற்சி யில் விவசாயிகளுக்கு மண் மாதிரி ஆய்வு செய்து அதற்கு ஏற்றார் போல், ரசாயன உரங் களை குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயன்ப டுத்தி, அதிக லாபம் பெறும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந் தனர்.
மஞ்சள் ஏலத்தில் மின்எடை இயந்திரம் பயன்படுத்த கோரிக்கை
சேலம், ஆக.3- ஆத்தூர் அருகே நடைபெற்ற மஞ் சள் ஏலத்தின்போது, மின்எடை இயந் திரம் பயன்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்த னர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற் பனை கூட்டுறவு சங்கத்தில் சனி யன்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், தலைவாசல், கெங்க வல்லி, திட்டக்குடி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 523 விவசாயிகள் 3348 மஞ்சள் மூட்டைகளை விற் பனைக்காக கொண்டு வந்திருந்த னர். ஆத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தி ருந்த 12 வியாபாரிகள் மஞ்சள் தரத் திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்த னர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.15,169க்கும், அதிகபட்சமாக ரூ.18,012க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.13,859க்கும், அதிகபட்சமாக ரூ.15,899க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ. 14,069க்கும், அதிகபட்சமாக ரூ. 18,889க்கும் விலை போனது. மொத் தம் ரூ.2 கோடியே 96 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தில் மஞ்சள் வரத்து 2714 மூட் டையாக இருந்த நிலையில், சனி யன்று 3348 மூட்டைகள் அதிகரித்து காணப்பட்டது. மின்எடை இயந்திரம் இதனிடையே, ஏலத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், பல்வேறு பகுதிகளில் இருந்து நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்கத்திற்கு மஞ்சள் மூட்டை களை விற்பனைக்காக கொண்டு வரு கிறோம். ஆனால், நிலையான விலை நிர்ணயம் இல்லை. பழைய முறை யில் எடை போடுவதால், மூட் டைக்கு மூன்று கிலோ வரை எடை குறைகிறது. எனவே மின் எடை இயந் திரம் மூலம் எடை கணக்கிட்டு தொகை வழங்க வேண்டும். இரவு நேரத்தில் வியாபாரிகள் வந்து கணக் கெடுப்பதாகவும், பகல் நேரத்தில் மட் டுமே கணக்கிட்டு தொகை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் மீது கோபத்தை காட்டாதீர்கள்!
அவிநாசி, ஆக.3- பிளக்ஸ் பேனர்கள் வைத்து பொதுமக் களை மிரட்டும் திருமுருகன்பூண்டி நக ராட்சி நிர்வாகத்தின் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு குப்பைகளை கையா ளுவதை தமிழ்நாடு முழுவதும் தனியாருக்கு கொடுக்கப்பட்டது. திருமுருகன்பூண்டி நக ராட்சியிலும் இந்த நிலை அமலுக்கு வந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்து, திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியது. ஒப்பந்த தாரர் மூலமாக தூய்மைப் பணியாளர்களை வைத்து, வீடுகளில் குப்பைகளை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்பொழுது பல்வேறு இடங்களில் திருமுருகன்பூண்டி நக ராட்சி நிர்வாகம் சார்பில், ‘குப்பை கொட்ட தீர் மீறி குப்பை கொட்டுவோர் தண்டிக்கப்ப டுவீர்கள்’ என தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் மீது கோபத்தை காட்ட வேண் டிய நகராட்சி நிர்வாகம், அப்பாவி பொது மக்களை பிளக்ஸ் பேனர் மூலம் மிரட்டுவது பொருத்தமற்ற செயல். வருகிற நாட்களின் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண் டும் நகராட்சி நிர்வாகமே குப்பைகளை கையாளும் பணியை மேற்கொள்ள வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறு: அபராதம் விதிப்பு
போக்குவரத்திற்கு இடையூறு: அபராதம் விதிப்பு திருப்பூர், ஆக.3- பல்லடத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்த னர். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினம் சனியன்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி, சங்ககிரி அருகே உள்ள ஓடாநிலையில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்திற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பு கள் சார்பில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனியன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனியன்று பல்லடம் நால் ரோட்டில், உடுமலை, பல்லடம் ஆகிய பகுதிகளில் இருந்து ஓடாநிலை நோக்கி சென்ற தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதி வேகத்துடனும், கார் மற்றும் வேன்களின் மீது அமர்ந்தபடியும், அதிக ஒலி எழுப்பியவாறு சாலையை மறித்து பட்டாசு வெடித்து பயங்கர சத்தத்துடன் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயணித்துள்ளனர். பல்லடம் போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியும், பேச்சைக் கேட்காமல் இளைஞர்கள் வாகனத்தை அதி வேகத்துடன் இயக்கி பொதுமக்களுக்கு அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அப ராதம் விதித்தனர்.
அணைகள் நிலவரம் (சனிக்கிழமை)
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:65.60/72 அடி
நீர்வரத்து: 4399கனஅடி
நீர்திறப்பு: 47கனஅடி
மழையளவு: 3 மி.மீ
சோலையார் அணை
நீர்மட்டம்:161.80/160அடி
நீர்வரத்து:2978.66 கனஅடி
நீர்திறப்பு:3336.99 கனஅடி
மழையளவு: 7 மி.மீ
ஆழியார் அணை
நீர்மட்டம்:118.40/120அடி
நீர்வரத்து: 599 கனஅடி
நீர்திறப்பு: 680 கனஅடி
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்: 28.14/60அடி
நீர்வரத்து: 15கனஅடி
நீர்திறப்பு: 26கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 88.75/90அடி.
நீர்வரத்து: 1512கனஅடி
நீர்திறப்பு: 1105கன அடி