districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரூ.10 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ரூ.10 லட்சத்திற்கு பருத்தி ஏலம் சேலம், ஜூலை 23- ஆத்தூர் அருகே நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புதுப் பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு ஆத்தூர், தலை வாசல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளி லிருந்து 57 விவசாயிகள் 441 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து, பி.டி ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,189 முதல் ரூ.7,339 வரையிலும், டி.சி.ஹெச். ரகம் ரூ.6789 முதல் 9,689 வரையிலும், கொட்டுரகம் ரூ.3,249 முதல் 4,169 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 149.75 குவிண்டால் பருத்தி ரூ.10 லட்சத்திற்கு ஏலம் போனது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், விலையில் மாற்றம் இல்லாத தால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். 

வணிகர்களை மீண்டும்  ஏமாற்றிய ஒன்றிய பட்ஜெட்

நாமக்கல், ஜூலை 23- ஒன்றிய அரசு தற்போது அறிவித்துள்ள பட்ஜெட் மூலம், வணிகர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயகுமார் வெள் ளையன் கூறுகையில், ஒன்றிய பட்ஜெட்டில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண் டும். 5, 12, 18, 28 சதவிகிதம் என 4 அடுக்கு நிலையில் உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை இரண்டடுக்காக குறைக்க வேண்டும். அத்தியாவசியப் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் மீதான கூடுதல் வரி விதிப்பினை நீக்க வேண்டும் உள்ளிட்ட வணிகர்களின் பல்வேறு கோரிக்கை களை ஒன்றிய அரசு பரிசீலித்து சலுகை வழங்காதது பெரும் ஏமாற்றம் தருகிறது. நிறைய எதிர்பார்ப்புடன் காத்திருந்த வணிகர்களை வழக்கம்போல இந்த முறையும் ஒன்றிய அரசு ஏமாற்றிவிட்டது, என்றார்.

வங்கதேசத்தில் இருந்து  ஆத்தூர் திரும்பிய மருத்துவ மாணவி

வங்கதேசத்தில் இருந்து  ஆத்தூர் திரும்பிய மருத்துவ மாணவி சேலம், ஜூலை 23- வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில், பெரும் வன்முறையாக மாறிய சூழலில், அங்கு மருத்துவ படிப் பிற்கு சென்ற மருத்துவ மாணவிகள், தப்பிப்பிழைத்து நாடு வந்து சேர்ந்தனர். இதில், சேலம் ஆத்தூரை சேர்ந்த மாணவி செவ்வாயன்று வீடு திரும்பினார்.  வங்கதேசத்தில் அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்க ளின் குழந்தைகளுக்கு, அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை ரத்து செய்ய வலியு றுத்தி நடந்த மாணவர்களது போராட்டம் தீவிரமடைந்து, வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்திற்கு படிப்பதற்கு சென்ற இந்தியாவை சேர்ந்தவர்கள், அவரவர் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். செவ்வாயன்று வங்கதே சத்தில் மருத்துவம் படித்து வரும், சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த, மாணவி ஜனனிப்ரியா வந்தடைந்தார். அவரை பார்த்ததும், பெற்றோர், கண்ணீருடன் அழைத்துச் சென்றனர். முன்னதாக, மாணவி ஜனனிப்ரியா, செய்தியாளர்களிடம் கூறுகையில், நான், வங்கதேசம், போக்ரா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அந்நாட்டில், இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடந்தது. மாணவர்கள் மீது தாக்குதல், போலீசார் மீது தாக்குதல், குண்டு போடுதல் போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டது. கடந்த, 17 முதல், விடுமுறை விட்டனர். விடு தியும் பூட்டிவிட்டனர். 20 ஆம் தேதி, எங்களை அனுப்பு வதாக இருந்தனர். இரவு நேரத்தில் பயணிக்க முடியாது என்ற னர். ஏழு பஸ்களில், இரண்டு போலீஸ் வாகன உதவியு டன், இந்திய எல்லைக்கு வந்தோம். எங்களது நிலை குறித்து, தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேட்டறிந்தார். கலவரம் குறித்த வீடி யோவை பார்த்தபோது, பதறிவிட்டோம். சிலருக்கு, விசா காலம் முடிந்ததால், அவசரமாக விசா பதிவு செய்து அனுப்பி வைத்தனர். கல்லுாரி திறந்ததும், அங்கு தொடர்ந்து படிப்பதற்கு, எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மத்திய, மாநில அரசு, வங்கதேசத்துடன் பேசி தீர்வு காண வேண்டும். எங்களது படிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்க ளுக்கு ஒன்றிய, மாநில அரசு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும், என்றார்.

மலைவாழ் மக்கள் குடியிருப்பில் மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

உடுமலை, ஜூலை 23- மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது இருமல், காய்ச்சல் பரவி வருவதால், முகாம்  அமைத்து சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை தர வேண்டும் என  வன உரிமைக்குழு கோரிக்கை வைத்துள்ளது.  உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்   மாவடாப்பு,  குழிப்பட்டி, குருமலை, கருமுட்டி, பூச்சிக்கொட்டாம்பாறை, திருமூர்த்திமலை, ஈசல்திட்டு, தளிச்சி, கோடந்தூர், கொட்டை யாறு, பொருப்பாறு, ஆட்டுமலை, வசம்குழம், புளியம்பட்டி,  மயிலாடும்பாறை, கரட்டுபதி, சேலையூத், காட்டுப்பட்டி உள்ளிட்ட 18 குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இதில், சில குடியிருப்பு பகுதிகள் மலை அடிவாரப் பகுதி யில், அதிகமான குடியிருப்புகள் அடர் வனப்பகுதியில் பல  கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளன. மேலும், மாவடாப்பு,  குழிப்பட்டி, குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை மற்றும் மேல்  குருமலை குடியிருப்புகள் ஒரே மலை பகுதியில் உள்ளன.  இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார் கள். இப்பகுதி மக்கள் கல்வி மற்றும் மருத்துவ தேவைக்கு  உடுமலை நகருக்கு வர வேண்டும் என்றால், கோவை மாவட் டம் அட்டகட்டி வழியாக சுமார் அறுபது கிலோ மீட்டர் சுற்றி  தான் வர முடியும். மேலும், திருமூர்த்தி மலை வழியாக உடு மலை செல்ல அடர் வனப்பகுதி வழியாக தான் வர முடியும்.  இப்படி அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருக்கும் மக்க ளுக்கு, தற்போது இருமல், கடுமையான காய்ச்சல் பரவி வரு வதால், சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை தர வேண்டும் என  வன உரிமைக்குழு கோரிக்கை வைத்துள்ளது.

வெங்கடேஸ்வரா நகர் ரேசன் கடை விற்பனையாளர் நியமிக்க கோரிக்கை

திருப்பூர், ஜூலை 23 - திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதி யில் செயல்படும் நியாயவிலைக் கடைக்கு   நிரந்தர விற்பனையாளர் நியமிக்க வேண்டும்  என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். வெங்கடேஸ்வரா நகர் நியாயவிலைக் கடையில் 1200க்கும் மேற்பட்ட ரேசன் கார்டு கள் உள்ளன. வெங்கடேஸ்வரா நகர், சத்யா  நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த நியாயவிலைக் கடை முக்கியமானதாக உள்ளது. இந்நிலை யில் இந்த நியாயவிலைக் கடையின் விற்ப னையாளர் அண்மையில் காலமாகிவிட்டார்.  இதையடுத்து இங்கு கடை விற்பனையாளர் இல்லாமல் இருந்தது. எனவே அருகாமை யில் இருக்கும் நியாயவிலைக் கடையின் விற் பனையாளரை இந்த கடைக்கு நிர்வாகத்தி னர் அனுப்பியுள்ளனர். இதனால் இரண்டு கடைகளையும் கவனிக்க வேண்டிய நிலை யில் அந்த விற்பனையாளர் சில நாட்கள் மட் டும் வெங்கடேஸ்வரா நகர் கடைக்கு வந்து பொருள் விநியோகம் செய்து வந்தார். மேலும் இந்த கடையில் மின் கட்டணம் செலுத்தாத நிலையில், இருளில் பொருள் விநியோகம் செய்யும் நிலை இருந்தது. இந்த கடைக்கு மாற்றுப்பணியாக வந்த விற் பனையாளர்  மின் கட்டணத்தை செலுத்தி யிருக்கிறார். எனினும் தொடர்ந்து தினமும் இங்கு விற்பனையாளர் வர முடியாத நிலை யில், பெரும்பாலான மக்கள் அத்தியாவசி யப் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பிச்  செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே இந்த  கடைக்கு நிரந்தர விற்பனையாளர் நியமிக்க  வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த னர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர்  டி.ஜெயபால் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அலுவலரைத் தொடர்பு கொண்டு விற்பனையாளர் நியமிக்க வேண்டும் என மக் கள் சார்பில் கோரிக்கை விடுத்தார். இது  தொடர்பாக கூட்டுறவுத் துறை பதிவாளர் கவ னத்துக்கு கொண்டு சென்று விற்பனையாளர்  நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்ததாக டி.ஜெய பால் கூறினார்.

அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 23- வடுகபாளையம் ஊராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் சாலை, பேருந்து, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப் படைப் பிரச்சனைகளை தீர்க்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.  பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது, வடுகபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சாண்டிபா ளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். இங்கி ருந்து விவசாய விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்கும், பனியன் கம் பெனி தொழில்களுக்கும், அவிநாசி, திருப்பூர் ஆகிய நகரங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்துக்கு பிரதானமாக பயன் படும் பிச்சாண்டிபாளையம் முதல் வடு கம்பாளையம் ஆலமரம் வரை உள்ள  சாலை பழுதடைந்து குண்டும் குழியு மாக மிகவும் மோசமான நிலையில் ஒரு  வருடமாக உள்ளது. இதனால் மக்கள்  பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்ற னர். எனவே புதிய சாலை அமைத்து தர  வேண்டும். அதேபோல பிச்சாண்டிபா ளையம் ஆதிதிராவிடர் காலனியில் தேங்கிநிற்கும் கழிவுநீரை வெளியேற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவஞ்சேரி புஞ்சை தாமரைகுளம்  ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். இங்குள்ள மக்கள் அனைத்து அத்தியாவசிய தேவைக ளுக்கும் அவிநாசி, நம்பியூர், சேவூர், திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு தான் சென்று வருகின்றனர். குறிப்பாக உயர் கல்வி பயில்வதற்கு அவிநாசி, திருப் பூர், கோவை சென்றுதான் படிக்க வேண் டிய சூழல் உள்ளது. இந்த பகுதி வழி யாக 36, 36ஏ என் 5 ஆகிய பேருந்து கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வார நாட்களில் பல நேரங்களில் செவ் வாய், வியாழன் ஆகிய நாட்களில் முழு மையாக பேருந்துகள் வராமல் போவது  தொடர்கதையாக உள்ளது. மேலும், காலை 10:30 மணிக்கு பிறகு மாலை 4  மணி வரை எந்த பேருந்து வசதியும்  இல்லை. இதனால் மக்கள் மிகவும் சிர மப்படுகின்றனர். சில நேரங்களில்  பெண்கள் பேருந்து நிறுத்தத்தில் கைகாட்டினாலும் நிற்காமல் போவதும்,  பெண்களை ஏளனமாக பேசுவதும் நடக் கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரி டம் கடந்த ஆண்டு மனு அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக் களின் அடிப்படை தேவையை கருத்தில்  கொண்டு சரியான நேரத்திற்கு பேருந்து களை இயக்க உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது.

மழை பாதிப்புப் பணிகளுக்கு நிவாரண தொகை ஆ.ராசா எம்பி., உறுதி

உதகை, ஜூலை 23– மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை  மேற்கொள்ள அதற்கான நிவாரணத் தொகையை முதல் வரிடம் எடுத்து சொல்லி விரைவில் பெற்று தர நடவ டிக்கை எடுக்கப்படும் என ஆ.ராசா எம்பி., தெரிவித் தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தமிழக விருந்தி னர் மாளிகையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு  கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு, பின் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா  செய்தியாளர்களிடம் கூறியதாவது, நீலகிரி மாவட் டத்தில் இந்த ஆண்டு பெய்த அதிக கனமழையால் ஏற் பட்ட பாதிப்புகளை முதல்வர் உத்தரவின் படி கடந்த ஒரு  வார காலமாக சுற்றுலாத்துறை அமைச்சர், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்பட்ட பகு திகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அதற்கான நிவா ரணத் தொகையை முதல்வரிடம் எடுத்து சொல்லி விரை வில் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் கன மழை காரணமாக ஏற்ப டும் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயா ராக உள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட தேவை யில்லை. குடியிருப்புகள் மற்றும் பள்ளி வளாகங்க ளின் அருகே உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என் றார். முன்னதாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அமைச் சர் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ், கூடுதல்  ஆட்சியர் கவுசிக், உதகை எம்.எல்.ஏ. கணேஷ்  உட் பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கர்ப்பத்தை பதிவு செய்ய முகாம்
உதகை, ஜூலை 23- மகப்பேறு திட்டத்தில் நிதி உதவி கர்ப்பத்தை பதிவு  செய்ய முகாம்கள் நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் பாலுசாமி  தெரிவித் தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நீலகிரி மாவட் டத்தில், மருந்துவர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட் டத்தின் கீழ், நிதி உதவி பெற தங்கள் கர்ப்பத்தை சுய மாக பதிவு செய்ய ஜூலை 22 முதல் ஜூலை 27 வரை  அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்களில் முகாம் கள் நடைபெற்ற உள்ளது. இம்முகாமில், கர்ப்பிணி யின் பெயர், வயது, ஆதார் எண், அதனுடன் இணைக் கப்பட்ட அலைபேசி எண், கணவரின் பெயர், வயது,  ஆதார் எண், அலைபேசி எண், திருமண தேதி,  அஞ்சல் எண்ணுடன் முகவரி (கர்ப்பிணி கடந்த 6  மாதமாக வசிக்கும் முகவரி, இனி தொடர்ந்து வசிக்கும் முகவரி) முகவரி சான்று, மருத்துவமனையில் கர்ப் பத்தை உறுதி செய்து மருத்துவரின் முத்திரை கையொப்பம் பெற்ற சான்றிதழ் உள்ளிட்டவற்றை பதி வேற்றம் செய்ய கொடுக்க வேண்டும்.  இவ்வசதிகள் முகாம்களிலும், மற்ற நேரங்களிலும் https://picme3.tn.gov.in என்ற இணையத்தை பயன்படுத்தி சுயமாக  கர்ப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு  அவர் கூறினார்.

திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை, ஜூலை 23- சிங்காநல்லூர் பகுதிக்கு உட்பட்ட திருச்சி  சாலையில் நடைபெற்று வரும் திட்டப்பணி களை கோவை மாநகராட்சி ஆணையர் திங்க ளன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.  கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகு திக்கு உட்பட்ட திருச்சி சாலையில் குடிநீர் திட் டப்பணி, பாதாள சாக்கடை திட்டப்பணி மற் றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் திட்டப் பணி ஆகியவற்றுக்காக தோண்டப்பட்ட சாலையை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் திங்களன்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இப் பணி மேற்கொள்ளப்பட்ட இடங்களில், சாலையோரம் குவிந்துள்ள மண் குவியலை  உடனடியாக அகற்றவும், திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தோண் டப்பட்ட இடத்தில் மீண்டும் தார்ச்சாலை சீராக  அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு அறிவுறுத்தினார்.

வளர்ச்சித்திட்டப் பணிகள் - ஆட்சியர் ஆய்வு

மேட்டுப்பாளையம், ஜூலை 23- மேட்டுப்பாளையத்தில் கலைஞர் நகர் புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடைபெற்று  வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை செவ்வா யன்று கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், மேட்டுபாளையம் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் 2023- 24 இன் கீழ் ரூ.8.63 கோடி மதிப்பீட் டில் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற்று  வருகின்றன. மேலும், பேருந்து நிலையத்தில் 28 கடைகள், 41 பேருந்துகள் நிறுத்துமிடம்,  இரு குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்பு  அறை, ஒரு சாதாரண காத்திருப்பு அறை,  பொருள்கள் பாதுகாப்பறை, ஏடிஎம், தாய் மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட பல் வேறு வசதிகளை கொண்டு அமைக்கப்பட உள்ளன.  இதேபோல், மேட்டுப்பாளையம் பழைய  நகராட்சி அலுவலகம் பின்புறம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் ரூ.2.59 கோடி மதிப்பீட்டில் மீன் மார்க்கெட் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 24  மீன் கடைகளும், 10 கறிக்கடைகளும் கட்டப் பட உள்ளன. இதேபோல் மீன் வெட்டுவதற் கான தண்ணீர் வசதியுடன் கூடிய தனி இடம்,  மீன்கள் பதப்படுத்தும் அறை, வாகனம் நிறுத் தும் பகுதி, கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வச திகள் செய்யப்பட உள்ளன. இவ்வாறு, மேட்டுப்பாளையம் நகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும்  வளர்ச்சத்திட்டப் பணிகளை கோவை மாவட்ட  ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செவ்வா யன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். அப்போது, எந்த அளவிற்கு பணி கள் முடிவு பெற்றுள்ளன? எவ்வளவு பணிகள்  மீதமுள்ளன? என்பது குறித்து அதிகாரிகளி டம் அவர் விளக்கமாக கேட்டறிந்தார். தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அவர் அதிகாரிகளிடையே அறிவுறுத் தினார். இந்த ஆய்வின் போது, மேட்டுப்பா ளையம் நகராட்சி ஆணையர் அமுதா, நக ராட்சி பொறியாளர் ராமசாமி, உள்ளிட்ட பலர்  உடன் இருந்தனர்.

காரில் வந்து ஆடுகளை திருடும் கும்பல்

கோவை, ஜூலை 23- காரில் வந்து தொடர்ந்து ஆடுகளை திருடிச் செல்லும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், குனியமுத்தூர், வடவள்ளி பகுதி களில் ஆடுகளை காரில் வந்து அடையாளம் தெரியாத நபர் கள் தொடர்ந்து திருடி செல்கின்றனர். குறிப்பாக, கடந்த சில  நாட்களுக்கு முன்பு வெள்ளை நிற காரில் அந்த கும்பல் இரண்டு வீடுகளில் பத்து ஆடுகளை திருடி சென்றது. இந்நிலையில், வடவள்ளி திருமுருகன் நகரில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று ஆடுகள் திருடப்பட்டன. அதே போன்று காந்திநகர் அருகே நால்வர்  நகரில் வசிக்கும் கண்ணன் என்பவர் வீட்டில் நான்கு ஆடு களும், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கல்பனா என்பவர் வீட்டின் முன்பு கட்டி இருந்த ஆடுகளையும் அடையாளம் தெரி யாத நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து புகார்களின் பேரில் வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  காரில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் கும்பலை தேடி வருகின்றனர்.

பாலியல் தொல்லை அளித்த அதிகாரி கத்தியால் குத்திய பெண்ணின் உறவினர்

கோவை, ஜூலை 23- பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தபால்  நிலைய அதிகாரியை கத்தியால் குத்திய உறவினரை போலீ சார் தேடி வருகிறது.  கோவை மாவட்டம், அருகே நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த 21 வயது பெண் தபால் நிலையத்தில் தற்காலிக ஊழிய ராக வேலை பார்த்து வருகிறார். அந்தப் பெண் ஊழியர் அலுவலகத்தில் பார்சல் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டு  இருந்தார். அப்பொழுது அதே தபால் அலுவலகத்தில் பணி  புரியும் தபால் நிலைய அதிகாரியான சூலூரைச் சேர்ந்த  விஜயகுமார் என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் கூச்ச லிட்டார். உடனே விஜயகுமார் தப்பி சென்று விட்டார். இது  பற்றி அந்தப் பெண் தனது குடும்பத்தினரிடம் கூறி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினரான உத்த மன், விஜயகுமாரை கத்தியால் குத்தினார். இதில், விஜய குமார் காயம் அடைந்தார். பாலியல் தொல்லைக்கு ஆளான  பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து தபால் நிலைய அதிகாரி விஜய குமாரை கைது செய்தனர். இதற்கிடையே கத்திக் குத்து சம்ப வம் தொடர்பாக விஜயகுமார் போத்தனூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உத்தமனை தேடி வருகின்றனர்.

அவலாஞ்சியில் 180 புதிய குடியிருப்புகள் திறப்பு

உதகை, ஜூலை 23- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாழ்விட மேம்பாட்டு வாரியம்  சார்பில் ரூ.24.57 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 180 புதிய  குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல் வர் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட அவ லாஞ்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு  வாரியம் மூலமாக நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சி பகுதி யில் 1.623 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அல்லாஞ்சி திட் டப்பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அனைத்து  அடிப்படை வசதிகளுடன் தரைதளம் மற்றும் முதல் தளத்து டன் கூடிய 180 புதிய குடியிருப்புகளுக்கு தமிழ்நாடு நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் வழங்கப் பட்டு, ரூ.24.57 கோடி மதிப்பில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா  ரூ.13.66 லட்சம் மதிப்பில் மொத்தம் 180 குடியிருப்புகள் கட்டப் பட்டுள்ளன. ஒவ்வொரு குடியிருப்புகளும், 391 சதுரடி பரப்பளவில், 36.39 சதுரமீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளது. மேலும், கேத்தி பேரூராட்சி மூலமாக குடிநீர் இணைப்பு பெறப்பட்டு, இந்த வளாகத்தில் அமைக்கப்படவுள்ள மேல் நிலை தண்ணீர் தொட்டி வாயிலாக குடிநீர் வழங்கப்பட வுள்ளது.  இத்திட்டப்பகுதியில், கட்டப்பட்ட 180 குடியிருப்புகளுக்கு  மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற  தொழிலாளர்களுக்காக குடியிருப்பிற்காக நிர்ணயிக்கப்பட்ட பயனாளி பங்களிப்பு தொகையை பெற்றுக்கொண்டு, இத்திட் டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்து தருவதாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாழ்விட மேம் பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட 180 புதிய குடியிருப்பு களை காணொலிக் காட்சி வாயிலாக திங்களன்று முதல்வர் திறந்து வைத்தார். தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, குடியிருப்புகளை பார்வையிட்டனர்.  இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி  பவ்யா தன்னீரு, கூடுதல் ஆட்சியர் கௌசிக், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருட்கள் குறித்த ‘லேபிள்’ இல்லை: சூப்பர் மார்க்கெட்டிற்கு அபராதம்

நாமக்கல், ஜூலை 23- பொருட்கள் குறித்த விவரங்கள் அடங் கிய ‘லேபிள்’ இல்லாமல் விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை பகுதி யைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியரான சுப்பராயன் (82). இவர் கடந்தாண்டு அக் டோபர் மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய் திருந்தார். அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு  மோகனூர் சாலையிலுள்ள கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் ஜவ்வரிசி 250 கிராம், சோம்பு  100 கிராம், சீரகம் 100 கிராம், பருப்பு 250  கிராம், பொட்டுக்கடலை 500 கிராம் ஆகிய வற்றை ரூ.196 செலுத்தி வாங்கினேன். அந்த பொருட்களை பாலிதீன் பொட்டலங்களாக கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டின் விற்பனை யாளர் வழங்கினார். அந்த பொட்டலங்களின் மீது எடை, விலை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய லேபிள் ஏதும் ஒட்டப்படவில்லை. இதுகுறித்து விற்பனையாளரிடம் கேட்ட போது, அவர் சரிவர பதில் தரவில்லை. இத னால் பொட்டலத்திலுள்ள பொருட்களின் தரம், அளவு, தூய்மை தன்மை ஆகிய வற்றை தெரிந்து கொள்ள முடியவில்லை. நுகர்வோர் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதால் எனக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடும், ரூ.10 ஆயி ரம் வழக்கின் செலவு தொகையும் கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் வழங்க உத்தர விட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டிந்தது. தாங்கள் விவரங்கள் அடங்கிய லேபிள் ஒட்டிய பொட்டலங்களைதான் விற் பனை செய்தோம் என கூட்டுறவு சூப்பர்  மார்க்கெட் நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத் தில் வாதிட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நாமக்கல்  மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராம ராஜ், உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர்  வழங்கிய தீர்ப்பில், நுகர்வோர் புகாரை தக்க  சாட்சியம் மற்றும் ஆவணங்களுடன் நிரூபித் துள்ளார். மேலும், நுகர்வோர் வாங்கிய பொட் டலப் பொருட்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டதால் அதற்கான ரூ.196 மற்றும் இழப்பீடாக நுகர்வோர் செலுத்திய தொகை யின் பத்து மடங்கு தொகையான ரூ.1,960 மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.1,000 ஆக மொத்தம் ரூ.3,156யை, கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நான்கு வார காலத்திற்குள்  வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை அருகே  பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

நாமக்கல், ஜூலை 23- ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைக்கக் கோரி, ராசிபுரம் நகர மக்கள் ஊர்வலமாக வந்து ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் செவ் வாயன்று கோரிக்கை மனு அளித்தனர்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ராசி புரத்தில் தற்போது இயங்கி வரும் புதிய  பேருந்து நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வாகன அதிகரிப்பால் ராசி புரம் நகரம் தினம்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. இதனை  கருத்தில் கொண்டு கடந்த நகராட்சி கூட்டத் தில் நகர எல்லையை விரிவுபடுத்தி புதிய பேருந்து நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு வரவேற்கிறது. அவ்வாறு அமையும் புதிய பேருந்து நிலை யம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு அமைந்தால் நகருக்கு வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் நக ரில் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் வியாபாரத் தேவை, வெளியூர்களில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு பய னுள்ளதாக அமையும். மேலும், ராசிபுரம் நகர வளர்ச்சிக்கு புதிய பேருந்து நிலையம் உறுது ணையாக இருக்கும். ஆகையால் தனிக் கவனம் செலுத்தி, ராசிபுரம் பொதுமக்க ளுக்காக உரிய ஆய்வு செய்து, தேசிய நெடுஞ் சாலை அருகில் புதிய பேருந்து நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. ராசிபுரம் நகர வளர்ச்சி குழுவினர் கூறுகை யில், சுதந்திரம் பெற்ற இந்தியாவின் முதல் மாவட்டம் சேலம். அந்த மாவட்டத்தில் முதன்மை நகராட்சி ராசிபுரம். இந்த நகராட்சி  அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை வளர்ச்சி பெறாமல் உள்ளது. அதற்கு காரணம் ராசிபுரம் சுற்றியுள்ள அனைத்து  பகுதிகளும் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்க ளால் சூழப்பட்டுள்ளது. எனவே அது ஓர் தீவு போல் உள்ளது. அதனால் நகரம் வளர்ச்சி அடையாமல் உள்ளது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருவதால் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே  இப்பகுதிக்கு புதிய பஸ் நிலையம் தேவைப் படுகிறது. இதனை கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும், என்றனர்.

டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்ற நகராட்சிக்கு சொந்தமான வாகனம்!

சேலம், ஜூலை 23- நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சாலையில் டீசல் இல்லாமல் நகராட்சிக்கு சொந்தமான வாக னம் நின்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர்  பணியாற்றி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் தினந் தோறும் வீடு, வீடாக சென்று சேகரிக்கும் குப்பைகளை ‘டாடா ஏஸ்’ வாகனத்தில் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், செவ் வாயன்று காலை வழக்கம் போல் வாகனத்தை தூய்மைப் பணியாளர் ஓட்டிச் சென்றார். சேலம் - கடலூர் சாலையிலுள்ள  நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, டீசல் இல்லாமல் சாலையிலேயே திடீரென நின்றுவிட்டது. இதனால் அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நக ராட்சி தூய்மைப் பணியாளர்கள் வாகனத்தை தள்ளிச்சென்று  ஓரமாக நிறுத்தினர். நகராட்சிக்கு சொந்தமான குப்பை கொண்டு செல்லும் வாகனம், டீசல் இல்லாமல் நகராட்சி அலு வலகம் அருகே நடுரோட்டில் நின்ற சம்பவம், நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை காட்டுகிறது. இதனை நிர்வாகம் உடன டியாக களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கரடியை கூண்டு வைத்து பிடிக்கக் கோரிக்கை

கரடியை கூண்டு வைத்து பிடிக்கக் கோரிக்கை கோவை, ஜூலை 23- குன்னூரில் கடையை உடைத்து சேதப்படுத்திய கர டியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் அண்மைக்கால மாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படு கிறது. குறிப்பாக, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு உண வைத் தேடி வந்து செல்கிறது. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள கரோலினா பெரியார் நகர் பகுதியில் உள்ள பானுமதி என்பவரின் கடையின் கதவை கரடி உடைத்து உள்ளே புகுந்து முருக்கு மிக்சர் உள்ளிட பொருட்களை சூறை யாடிச் சென்றது.  இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் வீடு வீடாக சென்று கதவுகளை கரடிகள் தட்டும் சம்பவத்தால் கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். எனவே, இந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.