ஈரோடு, அக். 22- ஈரோடு மாவட்டத்தில் அத்திக் கடவு-அவிநாசி திட்டத்தின்கீழ் பிரதான குழாய் பதிக்கும் பணி யினை நேரில் பார்வையிட்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள் ளது. பவானி ஆற்றில் காலிங்கராயன் அணை கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டி.எம்.சி. உபரிநிரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் 24,468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படுகிறது. இதற்காக 32 பொதுப் பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு ரூ.1756.88 கோடி மதிப் பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் பெறப் பட்டு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் பவானி, நல்லக்கவுண்டம்பாளை யம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய ஆறு நீர் உந்து நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலத்தடிநீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் நீரேற்று நிலை யம் 1 முதல் 2 வரை 4202 மீட்டர் நீளம் பணிகளும், நீரேற்று நிலையம் 2 முதல் 3 வரை 15944 மீட்டர் நீளம் பணிகளும் முடி வுற்றுள்ளது. மீதமுள்ள நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ் ணனுண்ணி தலைமையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பிரதான குழாய்கள் பதிக்கும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். காலிங்கராயன் அணைக்கட்டு பகுதி மற் றும் எலவமலை ஆகிய பகுதிகளில் நீரேற்று நிலையம் 1-ல் இருந்து 2-க்கான இடங்களில் பிரதான குழாய் பதிக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணி களை விரைவாக முடித்திட அலுவலர் களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, அத்திக்கடவு-அவிநாசி திட்ட செயற்பொறியாளர் மன் மதன், உதவி செயற்பொறியாளர்கள் சங்கர் ஆனந்த் (பவானி-1), வெங்கடாசலம் (பவா னி-2) உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.