கோவை, டிச.6- கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண் வளர்ச்சிக் கான உலகளாவிய மேம்பாடு குறித்த பன் னாட்டு பயிற்சி முகாம் திங்களன்று துவங்கி யது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கம், கோவை மாணவர் நலமையம் மற்றும் டல்ஹெசி பல்கலைக்கழகம், ஹாலிபேக்ஸ், கனடா இணைந்து, ஆப்பிரிக்கா உகாண்டா வில் வேளாண்மை பயிற்றுவிப்பாளர்களாக ஈடுபட்டுள்ளவர்களுக்கு வேளாண் வளர்ச்சிக் கான உலகளாவிய மேம்பாடு குறித்த பன் னாட்டு பயிற்சி முகாம் டிச.5 ஆம் தேதி முதல் டிச.16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியின் துவக்க விழா திங்களன்று நடைபெற்றது. மாணவர் நல மைய முதன்மை யர் நா.மரகதம் வரவேற்புரையாற்றினார். இப்பயிற்சி முகாமினை வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தில் நடைபெற்று வரும் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தினர். பயிற்சியாளர்கள் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்ற தொழில்நுட்ப அறிவை சரி யான வழியில் பயன்படுத்தி விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார். கனடாவின் திட்ட மேம்பாட்டு ஒருங் கிணைப்பாளர் டேவிட் பர்க்ஸ், பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார். இதில், புக்கால்சா வேளாண் கல்லூரி, ரேவன்டங்கா பண்ணை நிலையம், சிசி பண்ணை நிலையம் மற்றும் கேபராம்மேய்டோ தொழில்நுட்ப நிலையம் உகாண்டாவில் இருந்து 23 பயிற்சியாளர் கள், கனடாவின் டல்ஹெசி பல்கலைக்கழகத் திலிருந்து 2 பேராசிரியர்களும் கலந்து கொண் டனர். முடிவில் பேராசிரியர் ரா.பிரேமாவதி நன்றி கூறினார்.