districts

img

யோகாசன போட்டியில் பதக்கங்கள் வென்று அசத்திய மாணவர்கள்

கோவை, செப்.3- தென் மண்டல அளவிலான 18 வய துக்குட்பட்ட அஸ்மிதா மகளிர் யோகா சன போட்டியில் மூன்று தங்கம் எட்டு  வெள்ளி 11 பதக்கங்கள் பெற்ற அசத் திய மாணவிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு யோகாசன சங்கம், இந்திய விளை யாட்டு ஆணையம் மற்றும் யோகாசன பாரத் சார்பாக திருச்சியில் தென் மண் டல அளவிலான அஸ்மிதா கேலோ இந் தியா மகளிர் யோகா போட்டி திண்டுக் கல்லில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நா டாகா, ஆகிய 6 மாநிலங்களில் இருந் தும் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட  யோகா வீராங்கனைகள் கலந்து கொண் டனர். தமிழ்நாடு அணி சார்பாக கோவை  யோவா யோகா அகாடமியின் தலைமை  பயிற்சியாளர் வைஷ்ணவி மற்றும் அவரது மாணவிகள் தாக்‌ ஷயா ஸ்ரீ, சக்தி சஞ்சனா, ராகவர்தினி, பவ்ய ஸ்ரீ, ஷிவானி ஆகியோர் கலந்து  கொண்டனர். 18 வயதிற்கு உட்பட்ட மற்றும் அதற்கு மேல் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், கலை ஜோடி, பாரம்பரிய யோகா, கலை ஒற் றையர், கலைக்குழு என பல்வேறு பிரிவு களில் மூன்று தங்கம் எட்டு வெண்க லம் என பதினோரு பதக்கங்கள் வென்று  அசத்தினர். போட்டியில் பதக்கம் வென்ற அனைவரும் தேசிய அளவி லான அஸ்மிதா கேலோ இந்திய பெண்கள் லீக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். தென் மண்டல அளவில் வெற்றி பெற்று தேர்வாகி உள்ள ஆறு பேரும்  அடுத்து தேசிய அளவில் நடைபெற உள்ள மகளிர்க்கான போட்டியில் கலந்து கொள்ள செல்ல உள்ள நிலை யில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை மாணவர்கள் சந்தித்தனர். இவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து வீராங்கனைகள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர் நலன் அலுவலர் ஆனந்த் மற்றும்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை பிரிவு சீனியர்  மேலாளர் அருணா ஆகியோரை சந் தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது யோவா யோகா அகாடமியின் இயக்குனர் சர வணன் மாணவிகளின் பெற்றோர் ஆகி யோர் உடனிருந்தனர்.