திருப்பூர், அக். 21 - அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள தால் ரேசன் கடைகளில் அத்தியாவ சியப் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் தெற்கு மாநகரப் பகுதியின் பல் வேறு ரேசன் கடைகள் முன்பு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் பட்டுக்கோட்டை.யார் நக ரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தெற்கு நகர துணைச் செயலாளர் ஜி.சுமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட நிர் வாகிகள் ஏ.சகிலா, எஸ்.பானுமதி, இந் திய ஜனநாயக வாலிபர் சங்க நகர துணைச் செயலாளர் மௌனிஷ் கண் ணன், வாலிபர் சங்க முன்னாள் நகரச் செயலாளர் எஸ். சுந்தரம், முன்னாள் நகர நிர்வாகிகள் த.ஆறுகுட்டி, த.ஜெயபால், சு.தங்கராஜ், எம்.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். அதேபோல் கல்லம்பாளையத்தில் ரேசன் கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகரத் தலைவர் மினி தலைமை தாங்கினார். தெற்கு நகரச் செயலாளர் பானுமதி, சகிலா, ஜாபர் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் அப்பகுதி பெண்கள் கலந்து கொண்டனர்.