districts

img

அருந்ததியர் உள்இடஒதுக்கீடு வெற்றி விழா

திருப்பூர், ஆக. 6 – தமிழ்நாட்டில் அருந்ததியர் 3 சதவிகித உள்இடஒதுக் கீட்டை உச்ச நீதிமன்ற அமர்வு உறுதிப்படுத்தியதை வர வேற்று ஊத்துக்குளி வட்டம், நடுப்பட்டி ஊராட்சி, எம். தொட்டிபாளையம் மார்க்சிஸ்ட் கட்சி கிளை சார்பில் வெற்றி  விழா கூட்டம் நடத்தப்பட்டது. அருந்ததியர் 3 சதவிகித உள்இடஒதுக்கீட்டை உச்சநீதி மன்ற அமர்வு உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியதை வரவேற்று  ஞாயிறன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.  இவ்விழாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளர் க.பிர காஷ் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ந.விஜய் வரவேற் றார்.  3 சதவிகித இட ஒதுக்கீடு போராட்ட வரலாற்றை விளக்கி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக்குழு  உறுப்பினர் கை.குழந்தைசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் ஆர்.மணியன், சிஐடியு  செயலாளர் வி.காமராஜ், திமுக கிளை செயலாளர் மார சாமி ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, தாலுகாக் குழு உறுப்பினர் சிவராஜ்,  மூத்த தோழர் நடராஜ், தங்கவேல் உட்பட திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். கிளை உறுப்பினர் செ.நாக ராஜ் நன்றி கூறினார்.