கோவை, மார்ச் 24– தூய்மைவாதம் பேசப்படுகிற இடங்களில் எல்லாம், ஆணவப் படு கொலைகள் நடைபெறுகிறது. சாதி, மத மறுப்பு, இன கலப்புகளை நம்மில் இருந்து துவங்காமல் ஆணவப் படு கொலைகளை தடுக்க முடியாது என கோவையில் ப.பா.மோகன் பாராட்டு விழாவில் பங்கேற்ற கவிஞர் ஆதவன் தீட்சண்யா உரையாற்றினார். கோகுல்ராஜ் சாதி ஆணவப் படு கொலை செய்யப்பட்ட வழக்கில், அரசு வழக்கறிஞராக கலந்துகொண்டு சிறப்புற வாதாடி நீதியை நிலைநாட்டி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற் றுக்கொடுத்தார் ப.பா.மோகன். மிக வும் சிக்கலான வழக்கில், நீதியை நிலை நாட்டிய வழக்கறிஞர் ப.பா.மோக னுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு ஒடுக் கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து நடத்திய இவ்விழா அண்ணாமலை அரங்கத்தில், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநில துணை பொதுச்செய லாளர் யு.கே.சிவஞானம் தலைமை யில் நடைபெற்றது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ் வுரிமை இயக்கத்தின் மாவட்ட தலை வர் பி.முருகன் வரவேற்புரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், தமிழ் நாடு இலக்கிய பெருமன்றத்தின் நிர் வாகி வழக்கறிஞர் கே.சுப்பிரமணி யம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ் வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலா ளர் அ.அஸ்ரப் அலி, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.ஆறுச் சாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங் கத்தின் தலைவர் ஆர்.கோபால்சங்கர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
அர்பன், நக்சல் என்பதா..
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், வழக்கறிஞர் ப.பா.மோகன்-க்கு ஊர் ஊராக பாராட்டு விழாக்கள் நடத்தப்படு கிறது. இன்னொரு பக்கம் நம்மை அர்பன், நக்சல்கள் என்கின்றனர். தீண்டாமைக்கு எதிராக போராடுகிற வனுக்கு, சமூக சமத்துவத்திற்காக போராடுகிறவனுக்கு, பொருளாதார ஏற்றத்தாழ்வை சமப்படுத்த போராடு கிறவனுக்கு அர்பன், நக்சலைட் என்று பெயர் வைத்து அழைக்கப்படுவதால், அந்தப் பெயரை பெருமையோடு சுமக் கிறோம். யுவராஜ் மீதான தீர்ப்பு சமூ கத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற் படுத்தியிருக்கிறது. அவனை ஆதரிப் பவர்கள் என்ன விதமான நகர்த்தல் களை செய்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
யுவராஜை விட கொடூரமானவர்கள் உள்ளனர்
யுவராஜ் வஞ்சிக்கப்பட்டு விட்டதா கவும், அவனை மீட்க சாதிரீதியாக அணி திரள வேண்டும் என்று சிலர் இச்சமூகத்தில் உள்ளனர். பகிரங்க மாக நிதி உதவிக்கு அழைப்பும் விடுத் திருக்கிறார்கள். இது ஆபத்தான போக் காகும். இது சாதி ஆணவக் படுகொ லையை விட மிகக் கொடூரமானது. கொலைகாரன் யுவராஜ் மிகக் கொடூர மானவன். ஆனால், அவனை விடவும் மிகக் கொடூரமானவர்கள், சாதி ஆண வத்தை நிலைநிறுத்த நிதி அளிப்பவர் களும், இயக்கம் துவங்க அணிதிரட்டி கொண்டிருப்பவர்களும் தான். இந்தத் தீர்ப்பு வந்தபோது பல்வேறு அரசியல் கட்சிகள் தனது நிலைபாட்டை அறிவித் தது. ஆனால், தமிழகத்தின் மிக முக்கி யமான அரசியல் கட்சிகள் எவ்விதக் கருத்தையும் வெளிப்படுத்தாதது வருத்தமளிக்கிறது. ஆளுங்கட்சியும், தனது கட்சி சார்ந்த நிலைப்பாட்டை வெளியிடவில்லை.
மேலும், தமிழகத்தில் 18 சதவிகிம் பட்டியல் இனத்தவர்களும், ஒரு சதவிகி தம் பட்டியல் இன பழங்குடி மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கவ னம் செலுத்த வேண்டும். அப்படி நடக்க வில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளாகி றாள். ஒருநாளைக்கு 80 கொலைகள் எல்லாம் ஒரேவிதமான காரணங்க ளுக்காக நடத்தப்படுகின்றன. இங்கே அதிகமாக நடைபெறுகிறது என்பது உண்மைதான். ஆனால், இது ஏதோ இந்தியாவில் மட்டும் நடைபெறுவ தாக கருதிவிடக்கூடாது. தூய்மை வாதம் பேசக்கூடிய இடங்களில் எல் லாம் ஆணவப்படுகொலைகள் அதிக மாக நடைபெறுகின்றன. எங்கெல்லாம் சாதி தூய்மைவாதம் பேசப்படுகி றதோ? எங்கெல்லாம் இன, மத, நிறத் தூய்மைவாதங்கள் பேசப்படுகிற தோ? அங்கெல்லாம் இந்த வன்கொடு மைகள் நடத்தப்படுகின்றன.
ஆணவக்கொலையை தடுக்கும் செயல்கள் நம்மிலிருந்து...
யுவராஜ் போன்றவகள் ஆபத்தா னவர்கள். இச்சமூகத்தில் இன்னொரு யுவராஜோ, இன்னொரு கோகுல்ராஜ் படுகொலையோ உருவாகிவிடாமல் இருக்க நாம் பாடுபட வேண்டும். இது போன்ற வழக்குகள் அனைத்தையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி நீதியை பெற்று விடலாம் என்பது சாத்தியமான தல்ல. நீதிபதிகள் நீதியைத்தான் வழங் குகிறார்களா? என்கிற சந்தேகம் மக்க ளுக்கு வந்துவிட்டதை காண முடி கிறது. இது பல தீர்ப்புகளிலும் எதி ரொலித்திருக்கிறது. நியாயத்தின் பக் கம் நின்று தீர்ப்பை சொல்லுகிற நீதிபதி களை முற்போக்கு சமூக, ஜனநாயக இயக்கங்கள் அரணாக நின்று பாது காக்க வேண்டும் என்கிற நிலை உரு வாகியுள்ளதை மறுக்க முடியாது. தூய்மைவாதத்திற்கு எதிராக சாதி, மத மறுப்பு, இன கலப்புகளை திரு மணங்கள் வாயிலாக நடத்த வேண் டும். அத்தகைய நிலை ஏற்படாமல் யுவ ராஜ் போன்றவர்கள் உருவாகாமல் தடுக்க முடியாது, என்றார். நாம் பேசிக் கொண்டிருக்கிற இதே நேரத்தில் யுவ ராஜ் தண்டையை எதிர்த்து மேல் முறை யீடு செய்யப்பட்டுள்ளது. அங்கேயும் ப.பா.மோகன் சென்று வாதிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
நான் ஒரு கம்யூனிஸ்ட்...
இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் பேசுகையில், இந் நிகழ்வு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நான் ஒரு கம்யூ னிஸ்ட் ஆகத்தான் அறிவித்து கொள் வேன். சாதிகளை களைய அம்பேத்கர் சொன்னது போல், அகமண முறையை தவிர்த்து, புறமண முறைக்கு செல்ல வேண்டும். தொழிலை பிறப்பால் நிர் ணயிப்பதை தடுக்க வேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது கோகுல்ராஜின் தாயார் முகத்தில் இருந்த புன்னகைக்கு ஈடு எதுவும் கிடையாது, என்றார். முன்னதாக, இந்நிகழ்வில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட் டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டது.