சேலம், அக்.15- சொத்து தகராறில் 2 குழந்தைகளை கழுத் தறுத்து படுகொலை செய்த குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உறவினர்கள் மறியலில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், தனது குடும் பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். இந் நிலையில், ராஜாவின் மகன் மற்றும் மகளை, திங்களன்று சொத்து தகராறு காரணமாக தனசேகரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் கழுத்தறுத்து கொலை செய்தனர். படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள் ளது. காவல் துறை விசாரணையில் தனசேகர் மட்டும்தான் கொலை செய்துள்ளார் எனக் கூறி அவர் மீது மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கைது செய்யப் பட்டுள்ளார். ஆனால், கார்த்திக்கும் சேர்ந்து தான் கொலை செய்துள்ளனர் என்று, குழந்தைகளை இழந்த ராஜா கூறியுள்ளார். இந்நிலையில், கார்த்திக் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கைது செய்தால் மட்டுமே, இரு குழந்தைகளின் உடலை பெற்றுக்கொள்வோம் என்றுக்கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ராஜாவின் உறவினர்கள் மறியலில் ஈடு பட்டனர். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஐ.ஞானசௌந்தரி, குண சேகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கன கராஜ், தேவி, பெரியசாமி, பவித்ரன், ராஜாத்தி, கவிதா, மேற்கு மாநகரச் செய லாளர் கணேசன் மற்றும் மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தை சேர்ந்த ஏரளாமா னோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.