பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமித்திடுக!
கோவை, செப்.19- பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை உடனே நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தி னர் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரை நியமிக்கும் முறையைக் கைவிட்டு, மாநில முதல்வர்களை வேந்தர்க ளாக நியமிக்க வேண்டும். துணைவேந்தரை உடனே நியமிக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி. பிற்போக்கு கருத்துக்களை மாணவர்களிடம் விதைப்பதை நிறுத்த வேண்டும். ஆசிரி யர்கள், பணியாளர்கள் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டம், பாரதியார் பல் கலைக்கழகம் முன்பு வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைச் செயலாளர் வே.வசந்தகுமார், இளைஞர் பெருமன்ற மாவட் டச் செயலாளர் மு.பிரசாந்த் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். இதேபோன்று, சேலத்தில், பெரியார் பல்கலைக்கழகம் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நிருபன், மாவட்டச் செயலாளர் நேதாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, செப். 19- அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங் களை அழைத்து பேசி சுமூக தீர்வு காண வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஈரோடு மண்டல அலுவலகம் முன்பு புதனன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் 84 சங்கங்களை அழைத்து நிர்வாகம் பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டுள்ளது. 2003 ஏப்ரல் 1 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய் வூதியம் வழங்க வேண்டும். 8 நூற்றாண்டு களாக மறுக்கப்பட்டுள்ள அகவிலைப் படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டிடிஎஸ் எப் நிர்வாகி ஷாஜகான் தலைமை வகித் தார். அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு மண்டலத் தலைவர் கே. மாரப்பன், மண்டல பொது செயலாளர் டி.ஜான்சன் கென்னடி, பன்முகத் தலை வர் ந.முருகையா எஐடியுசி நிர்வாகி கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் 40 ட்ரக்கிங் சாலைகள்
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்
கோவை, செப்.19- தமிழ்நாட்டில் 40 ட்ரக்கிங் சாலைகள் கண்டறியப்பட்டுள்ளது, இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரியில் 27 ஆவது மாநில அளவிலான வனத்துறை விளை யாட்டுப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் 12 மண்டல வனத்துறையை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதி வேந்தன் வியாழனன்று துவக்கி வைத் தார். இந்நிகழ்வில் பங்கேற்று அமைச் ்சர் மதிவேந்தன் பேசுகையில், 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் அகில இந்திய வனத்துறை விளையாட் டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. 8ஆவது அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்நிலை யில் 28 ஆவது அகில இந்திய வனத் துறை விளையாட்டுப் போட்டிகள் தமிழ கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்றார். மேலும், அவர் பேசுகையில், 2022 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரை ரூ. 920.52 கோடி ஜப்பான் நாட்டு நிதி உதவி செல வில் தமிழ்நாடு உயிர் பன்மையி யல் பசுமையாக்கும் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அகழிகள், செயற்கை நுண்ணறிவு கருவிகள், செயற்கை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை பாலக் காடு ரயில்வே வழித்தடத்தில் யானை உயிரிழப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. மனித வன விலங்கு மோதல்கள் பல்வேறு நடவடிக்கைகள் திட்டங்கள் மூலமாக தடுக்கப்பட்டுள் ளது. தமிழ்நாட்டின் வனப்பரப்பை 10 ஆண்டுகளில் 23.76 சதவீதத்தில் இருந்து 33 சதவிகிதமாக அதிகரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற் காக 260 கோடி நாட்டு மரங்களை நட்டு கால சூழ்நிலையை கண்டறிந்து பல் வேறு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது என்றார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், யானை வழித்தடங்கள் எங்கே இருக்கிறது என் பதை கண்டறிந்து ஆராய்ந்து வரு கின்றோம். யானைகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இந்த அரசு வனவிலங்குகளை எந்த அள விற்கு பாதுகாக்கிறது என்பதற்கான அறிகுறி தான் இது. மனித வனவி லங்கு மோதல் அதிகம் உள்ள இடங்க ளில் தனி கவனம் செலுத்தி, அந்தந்த மாவட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின் றது. மனித விலங்கு மோதலால் ஏற்படும் விளைவுகளுக்கு நிவாரணத்தை முத லமைச்சர் அதிகப்படுத்தியும், விரைவு படுத்தியும் இருக்கிறார். யானைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறா மல் இருப்பதற்கு தற்பொழுது பல்வேறு நவீன கருவிகள் வந்திருப்பதை குறிப் பிட்ட அமைச்சர் இவற்றை கோவை வனப்பகுதியில் வைத்து ஆய்வு செய்து, வனத்துறை நிதியில் பல்வேறு புதிய நவீன கருவிகளை வாங்கி ஒவ் வொன்றாக பணிகளை மேற்கொள்ள லாம். தமிழ்நாட்டில் 40 ட்ரக்கிங் சாலை களை கண்டறிந்துள்ளனர். விரைவில் விளையாட்டு துறை அமைச்சர் அதனை திறந்து வைக்க உள்ளார். அது குறித் தான விவரங்கள் ஆன்லைனில் தெரி யப்படுத்தப்படும் என்றார்.
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை முயற்சி
கோபி, செப்.19- கோபி அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள புஞ்சைதுறை யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இலக்கியா. இவரது கணவர் நந்தகுமார் இருவருக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகியுள் ளது. இந்நிலையில், இவ ரது கணவர் நந்தகுமார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வாகன விபத்தில் உயிரிழந் தார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவி இலக் கியா தற்கொலைக்கு முயன்று அவருக்கு சொந் தமான விவசாய கிணற்றில் குதித்துள்ளார். உடனே அக் கம் பக்கத்தில் இருந்த உற வினர்கள் இலக்கியாவை சிறிது நேரமாக காண வில்லை என்பதால் விவசாய கிணற்றை சென்று பார்த் துள்ளனர். இலக்கியா தண் ணீரில் தத்தளித்து கொண்டி ருந்தார். உடனே, கோபி தீயணைப்புதுறையிருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு துறையினர் கிணற் றில் இருந்த இலக்கியாவை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூய்மை பணியாளர்களின் வீடுகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை
உடுமலை, செப்.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை நகரக் குழுவின் கிளை மாநாடுகளில் தூய்மைப் பணியாளர்களின் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை நகரக் குழுவின் கிளை மாநாடுகளில் உடு மலை நகரப் பகுதியில் இருக்கும் வள்ளியம் மாள் காலனியில் பல ஆண்டுகளாக தூய்மை பணியாளர்கள் வசிக்கும் வீடுகளுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும். கணக்கம்பாளை யம் பகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். யூகேசி நகரில் இருக்கும் அரசு இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் கட்ட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து, நகரம் மாதர் கிளை செயலாளராக மாலினி, நகரம் 1 கிளைச் செய லாளராக முருகேசன், நகரம் 2 கிளைச் செயலா ளராக மாசிலாமணி, நகரம் ஓய்வு கிளைச் செயலாளராக கணபதி, சின்னவீரம்பட்டி 1 கிளைச்செயலாளராக சிவராமன், சின்னவீ ரம்பட்டி 2 கிளைச் செயலாளராக சுந்தரம், சின் னவீரம்பட்டி மாதர் கிளைச் செயலாளராக மகேஷ்வரி, எஸ்.வி. புரம் கிளைச் செயலா ளராக குமார், எஸ்.எம்.பாளையம் கிளைச் செயலாளராக சுதாசுப்பிரமணியம், ஏரிப்பா ளையம் வடக்கு கிளைச் செயலாளராக ராஜன், ஏரிப்பாளையம் தெற்கு கிளைச் செய லாளராக ரத்தினசாமி, மத்திய பஸ் நிலையம் ஆட்டோ கிளைச் செயலாளராக கலிபுல்லா, ஐஸ்வர்யா நகர் ஆட்டோ கிளைச்செயலா ளராக சையது இப்ராஹீம், மின்வாரிய கிளைச் செயலாளராக ஜெகானந்தா, போக்குவரத்து கிளைச் செயலாளராக தியாகு, எஸ்.எஸ். கிளைச் செயலாளராக நடராஜ், போடிபட்டி கிளைச் செயலாள ராக ஆனந்தகுமார், காந்திசவுக் கிளைச் செய லாளராக ராமசாமி, ராமசாமிநகர் கிளைச் செயலாளராக சபரி, நெடுஞ்செழியன் காலனி கிளைச் செயலாளராக நீலமணிகண்டன், ராஜேந்திரா ரோடு கிளைச் செயலாளராக ஜோசப் ஆகியோர் புதிய கிளைச் செயலாளர் களாக தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும், உடுமலை நகரக்குழுவின் 24 ஆவது மாநாடு 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவசக்திகா லனி அமுதாராணி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை: அமைச்சர் சாமிநாதன் பேட்டி
திருப்பூர், செப். 19 - திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் மினி டைடல் பார்க் ரூ.40 கோடி மதிப்பில் 9 அடுக்குமாடி கட்டிட கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமி நாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் த.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுப் பணிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறியதா வது, திருமுருகன்பூண்டியில் அமைய உள்ள மினி டைடல் பார்க் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது. வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது திராவிட கட்சிகளை பாதிக்காது. குறிப்பாக திமுகவை பாதிக்காது. எதைக் கண்டும் திமுக அஞ்சப் போவதில்லை. மக்கள் பணியை தொடர்ந்து திமுக மேற்கொள்ளும், மற்ற இயக்கங்களால் எவ்வித அச் சத்தையும் உருவாக்க முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்த லில் வாக்களித்து அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளி லும் வெற்றி பெற வைத்துள்ளனர். யார் கட்சி ஆரம்பித்தா லும் திமுகவின் பணி வழக்கமான வகையில் நடைபெற்று வரும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப் புதல் அளித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாகாது. திருவள்ளுவர் பிறந்த தினம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆதா ரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் சட்டப்படி அதற்கான நடவ டிக்கை எடுக்கப்படும். ஆனால் அந்த ஆதாரங்கள் சமர்ப்பிப்ப தில் சாத்திய கூறுகள் குறைவு என்றார்.
27ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருப்பூர், செப். 19 - திருப்பூர் மாவட்ட விவசா யிகள் மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும் செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை காலை 10: 30 மணிக்கு மாவட்ட ஆட்சி யர் அலுவலக அறை எண் 240 இல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊக்கத் தொகையை உடனே வழங்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
திருப்பூர், செப்.19 - பால் உற்பத்தியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்க திருப்பூர் மாவட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப நிலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் விவசாயிகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3/- ஊக்கத்தொகை தமி ழக அரசு வழங்கி வந்தது. வழங்கி வந்த ஊக்கத்தொகையை சமீப கால மாக நிறுத்தப்பட்டுள்ளதாக பால் உற் பத்தியாளர்கள் தெரிவிக்கின்றார் கள். இதனால் கறவை மாடு வைத்து பால் கறந்து ஆவின் கூட்டுறவு சங்கங் களுக்கு கொடுக்கும் விவசாயிகள் கடுமையான நெருக்கடிக்கு உள் ளாகி உள்ளனர். அதுவும் தற்போது தவிடு, புண்ணாக்கு, பருத்தி விதை, கலப்பு தீவனம், சோளத்தட்டை உள் ளிட்டு கால்நடைகளுக்கு தேவை யான இடுபொருட்கள் விலை அபரித மாக உயர்ந்துவிட்ட நிலையில் விவ சாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். ஏற்கனவே உற்பத்தி செய்யும் பாலுக்கு கட்டுப்படியான விலை இல்லாத நிலையை எண்ணி விவசாயிகள் வேதனைப்பட்டு வரு கின்றனர். ஆகவே தமிழ்நாடு அரசும், ஆவின் நிர்வாகமும் உடனடியாக விவசாயிகள் உற்பத்தி செய்து ஆவி னுக்கு வழங்கும் பாலுக்கு ஊக்கத் தொகையான லிட்டர் ஒன்றுக்கு ரூ.3/-ஐ உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க திருப்பூர் மாவட்டக் குழு கேட்டுக்கொள்கிறது. இந்த கோரிக்கை மனுவை வியா ழக்கிழமை மதியம் 1 மணியளவில் திருப்பூர் மாவட்ட ஆவின் அலுவல கத்தில் பொது மேலாளர் சுஜாதாவி டம் அளிக்கப்பட்டது. இதில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே. கொளந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மின்சாரம் தாக்கி விழுந்த காக்கையை தீயணைப்பு வீரர் சி.பி.ஆர் செய்து மீட்பு
கோவை, செப்.19- கவுண்டம்பாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காக்கையை தீயணைப்பு வீரர் சி.பி.ஆர் செய்து காப்பாற்றினார். கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள “டிரான்ஸ்பார்மரில்” அமர்ந்த காக்கை ஒன்று மின்சாரம் பாய்ந்து சாலையில் விழுந்தது. இதை கண்ட தீயணைப்பு வீரர் வெள்ளைத்துரை காக்கையை எடுத்து இதயத்துடிப்பை வர வைக்க சி.பி.ஆர் கொடுத்து, அதன் வாயில் காற்றை ஊதினார். இதில், சிறிது நேரத்தில் காக்கை உயிர் பிழைத்தது. இதையடுத்து அதனை தீய ணைப்பு நிலைய வளாகத்தில் நிழலில் விட்டனர். சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய காக்கை அங்கிருந்து பறந்து சென்றது. சி.பி.ஆர் செய்து காக்கையை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் வீடியோ இணையத்தில் வைரலாகி வரு கிறது.
மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் தீர்வு
உதகை, செப்.19- பந்தலூர் எம்ஜிஆர் நகரில், கழிவு நிர் போக்கை மறித்து தனிநபர் ஒருவர் சுவர் எழுப்பியதால் குடிநீர் கிணற்றில் கழிவு நீர் கலப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பொது மக்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வந்த நிலையில், வியாழனன்று அந்த சுவரை நெல்லியாளம் நகராட்சி இடித்தது. நீலகிரி மாவட்டம், பந்தலூரில் எம்ஜிஆர் நகர் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில், கழிவு நீர் செல்லும் போக்கை மறித்து தனிநபர் ஒருவர் சுவர் எழுப் பியிருந்தார். இதன்காரணமாக குடிநீர் கிணற் றில் கழிவுநீர் கலப்பதால், அந்த சுவரை இடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மற் றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். நெல்லியாளம் நகராட்சி கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து தீக்கதிரில் புதனன்று விரிவான செய்தி வெளியானது. இதனையடுத்து வியாழனன்று நெல்லியா ளம் நகராட்சியை முற்றுகையிடப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. இந்நி லையில், நெல்லியாளம் நகராட்சி, அதிரடி யாக கழிவு நீர் செல்லும் பாதையை மறித்து கட்டப்பட்டிருந்த சுவரை இடித்து அதிரடி காட்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், பந்தலூர் எம்ஜிஆர் நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால் இன்று தீர்வு எட்டப்பட்டுள்ளது. நெல்லியாளம் நகராட்சியின் தர்ணா போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் திரண்டு வருவதை அறிந்த நகராட்சி, தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த கழிவுநீர் கால்வாயின் தடுப்பு சுவரை, வட் டாட்சியர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் அகற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் செல்வ தற்கு வழியில்லாமல் இருந்த எம்ஜிஆர் நகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு எட்டப் பட்டுள்ளது. இப்போராட்டத்தை உறுதி யோடு இறுதி வரை முன்னெடுத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு எங்கள் பகுதி மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம், என்றனர்.