அவிநாசி மார்ச் 25 - அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்காட்சி மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சார்பாக தரம் பிரித்தல், இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் உற்பத்தி செயல் விளக்க கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கழிவுகளின் தரம் பிரித்தலின் அவசியம் குறித்து திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் வீரபத்மன் உரையாற்றினார், பேருராட்சி தலைவர் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணியை துவக்கி வைத்தார். செயல் அலுவர் செந்தில் குமார் முன்னிலை வகித் தார். இதில், தூய்மை உறுதி மொழி எடுக்கப்பட்து. இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் கருணாம்பாள், கோபால கிருஷ்ணன், சசிகலா கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்ற னர். முன்னதாக, பிளாஸ்டிக் தடை மாற்று பொருட்கள் கண் காட்சியினை பார்த்திபன் ஏற்பாடு செய்தார்.