districts

img

போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

திருப்பூர், பிப்.27- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் வடக்கு மாந கர குழு சார்பில் போதைக்கு எதிரான ஒரு கோடி கையெ ழுத்து இயக்கம் திங்களன்று புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் போதைக்கு  எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழு வதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திங்க ளன்று புதிய பேருந்து நிலையத்தில் வடக்கு மாநகர கமிட்டி  உறுப்பினர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.  ஸ்ரீ  குமரன் மருத்துவமனை உரிமையாளர் செந்தில்குமார் முதல்  கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். முன்னாள் வடக்கு மாந கர தலைவர் ஆ.சௌந்தர்ராஜன் வாழ்த்தி பேசினார்.  மாவட்ட  செயலாளர் எஸ்.மணிகண்டன், வடக்கு மாநகர செயலாளர்  ச.விவேக் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வாலி பர் சங்க எஸ்.வி காலனி கிளையின் பகத்சிங் சிலம்ப குழு  மாணவ மாணவியர் சிலம்பம் சுற்றி மக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கையெ ழுத்திட்டனர்.