districts

img

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

பள்ளிபாளையம், மார்ச் 15- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிறுத்த  பகுதி, பள்ளிபாளையம், வெப்படை நால் ரோடு உள்ளிட்ட  பல இடங்களில் கள்ளச்சாராயத்தின் தீமை மற்றும் குடியால்  விளையும் கேடுகள் குறித்து, போதை வழக்கத்திற்கு எதிரான  விழிப்புணர்வு பிரச்சார இயக்க நிகழ்வானது புதனன்று நடை பெற்றது. இந்நிகழ்வினை குமாரபாளையம் வட்டாடசியர் சண்முக வேல் துவக்கி வைத்தார். சேலம் டிவிஎஸ் ரேவதி கலைக்குழு வினர் கரகாட்டம் மூலம் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.  மேலும், போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆடல், பாடல் மற்றும் நாடக நிகழ்வின் மூலமாக விழிப்புணர்வு  ஏற்படுத்தினர். பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் கிருத்திகா நன்றி கூறினார்.