கோவை, டிச.8- கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அம்பேத்கர் 66ஆவது நினைவு தின தெருமுனை கருத்தரங்கம் பாப்ப நாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஒருங்கினைப்பாளர் வழக்கறிஞர் கோபால் சங்கர் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வழக் கறிஞர் ரா.ஆறுச்சாமி, வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செய லாளர் ஜோதிக்குமார், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அசாருதீன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் மலரவன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மூர்த்தி, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மா.நேருதாஸ், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் கே.பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினர். முன்னதாக, நிமிர் கலைக்குழுவின் பறையிசை நடைபெற்றது. இதில், ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.