சேலம், மார்ச் 6- தன்னிச்சையாக செயல்பட வேண்டிய துறைகள் ஏவிவிடப்படுகிறதென, சேலத்தில் நடைபெற்ற ஓய்வூதியர் கருத்தரங்கில் தலை வர்கள் குற்றஞ்சாட்டினர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கம் சார்பில், சிறப்பு கருத்தரங்கம் சிஐடியு சேலம் மாவட்டக்குழு அலுவலகத் தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் (பொ) எ.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வரவேற்றார். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு மக்களுக்கு எதிராக செய்த செயல்கள் குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, வேளாண் சட்டங்களை அமல் படுத்தியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், இதனை எதிர்த்து போராடிய விவசாயிகள் சுமார் 750 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மீது மத்திய புலனாய்வுத்துறை உள்ளிட்ட தன்னிச்சை யாக செயல்பட வேண்டிய துறைகளை ஏவி விட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட எல்ஐசி, வங்கிகள் உள் ளிட்ட அனைத்து துறைகளிலும் தற்போது ஒன்றிய மோடி அரசாங்கம் தனியாருக்கு விற் பனை செய்து வருகிறது. இதனால் உழைப்பு சுரண்டல், சமூக பாதுகாப்பிண்மை, ஓய்வூதி யம் இல்லாத சூழல் ஏற்படுகிறது. எனவே, பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வேண்டும். மத, இன, மொழி, பிராந்திய வாதங்கள் உள்ளிட்டவைகள் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.சுப்பிரமணியம், தென் மண்டல எல்ஐசி சங்க துணைத்தலைவர் ஆர்.தர்மலிங்கம், மாவட்டப் பொருளாளர் எ. அருணகிரி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.