திருப்பூர், மார்ச் 9 - பெருமாநல்லூர் அருகே காளிபா ளையம் கிராம குடியிருப்பிற்குள் செல் போன் டவர் அமைப்பதற்கு, ஊராட்சி மன்ற தலைவர் தன் சுய லாபத்திற்காக தன்னிச்சையாக முடிவு எடுத்து அனுமதி அளித்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். காளிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பிற்குள் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா வடி வேலுக்கு சொந்தமான காலி இடத்தில் கடந்த மாதம் குழி தோண்டும் பணி நடை பெற்றது. இது குறித்து ஊர்மக்கள் கேட்ட பொழுது ஏர்டெல் 5ஜி டவர் வருவ தாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், ஊருக்குள் டவர் அமைப்பது குறித்து ஏன் எங்க ளுக்கு தகவல் தரவில்லை. இங்கு டவர் அமைத்தால் பாதிப்பு ஏற்படும், எனவே இங்கு அமைக்க வேண்டாம். குடியிருப்புக்கு 1 கிமீ தள்ளி அமைக்க லாம் என்று ஊராட்சி தலைவரிடம் கூறி யுள்ளனர். இதையடுத்து பணிகள் நிறுத் தப்பட்டது. எனினும் கடந்த திங்களன்று, இரும்பு கம்பிகள் கொண்டு வரப்பட்டு மீண்டும் அதே இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையறிந்த ஊர் மக்கள் டவர் அமைக்கும் பணியை நிறுத்த வலியுறுத்தி அங்கு போராட்டம் நடத்தினர். இதுபற்றி மக்கள் கூறுகையில், எங் கள் குடியிருப்பிற்குள் பாதிப்பு ஏற்ப டுத்தும் டவர் வருவதை நாங்கள் விரும் பவில்லை, ஊருக்கு வெளியில் அமைத்து கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறோம். ஊராட்சி மன்ற தலைவர் தன் சொந்த லாபத்திற்காக தன்னிச்சை யாக முடிவு எடுத்துள்ளார். ஊராட்சி மன்ற துணை தலைவர், 3ஆவது வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் அனை வரும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள், என்றனர். ஆனால் செவ்வாயன்று காவல் துறையினர் பாது காப்புடன் ஏர்டெல் நிர்வாகத்தினர் அங்கு வந்தனர். டவர் அமைக்கும் பணிக்கு ரூ. 8 லட்சம் செலவு செய்யப் பட்டுள்ளது. அதை யார் தருவார்கள், நீங்கள் தருவீர்களா என்று, ஏர்டெல் நிர் வாகத்துக்கு ஆதரவாக, போலீசார் பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினர்.ஊராட்சி தலைவரைத் தொடர்பு கொண்டால் ஒப்பந்தம் கையெழுத்தி டப்பட்டு விட்டது இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார். இரவு 7 மணிக்கு வருகிறோம் என்று கூறிவிட்டு சென்ற போலீசாருக்காக 11 மணி வரை காத்திருந்தோம், அவர்களும் வர வில்லை. ஊராட்சித் தலைவரும் வர வில்லை. ஊருக்குள் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி முதல மைச்சர் தனி பிரிவுக்கு இணையம் மூலம் மனு அனுப்பியுள்ளோம். மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சென்று மனு கொடுக்கவுள்ளோம் என்று மக்கள் தெரிவித்தனர்.