தருமபுரி, மார்ச் 29- ஓய்வுபெற்ற ஊழியர்களின் போராட்டத்திற்க்கு ஆதர வாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்ஐசியில் பணியாற்றி ஓய்வுபெறுவதற்கு முன்பே இயற்கை எய்தியவரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தில்லி, ஜந்தர்மந்தர் பகுதியில் எல்ஐசி ஓய் வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெறு கிறது. இப்போராட்டத்திற்க்கு ஆதரவாக அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தருமபுரி எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். கோட்ட இணைச்செயலாளர் ஏ.மாதேஸ்வரன், நிர் வாகி சந்திரமெளலி, ஓய்வுபெற்றோர் சங்க நிர்வாகி சோம சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.