districts

img

ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக.27-  வீடு கட்ட மானியத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர்  செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கட்டடத் தொழிலாளர் நல வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். வாரிய முடிவுப் படி ஓய்வூதியம் மாதம் ரூபாய் 2 ஆயிரம் வழங்க வேண்டும். மனு செய்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். வீடு கட்ட மானியம் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று கோவை, இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்.செல்வம் தலைமை தாங்கினார். கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.செல்வராஜ், ஏஐடியுசி மாவட்ட கவுன்சில் பொதுச் செயலாளர் சி.தங்கவேல் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். இதனையடுத்து நலவாரிய அலுவல ரிடம் மனு அளித்தனர்.