ஈரோடு, ஜூலை 23- இலவச வீட்டுமனை, தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பாவனி சாகர் புளியம்பட்டி வட்டாரக் குழு அமைப்புக் கூட்டம் பவானிசாகரில் நடைபெற்றது. ஏ.பி.ராஜூதலைமை வகித் தார். டி.சுப்பிரமணி வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தொடக்க உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் ரங்கசாமி நிறைவுரையாற்றினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி, வேலைக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். வேலைக்கான உபகரணங்கள் வழங்க வேண்டும். வேலைக்குச் செல்லும் இடத்திற்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும். வீட்டுமனை இடம் இல்லாதவர் களுக்கு இடமும், வீடு இல்லாதவர்களுக்கு வீடும் கட்டிக் கொடுக்க வேண்டும். பவானிசாகர் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக கே.ஆறுச்சாமி, செயலாளராக ஜி. சரவணன், பொருளாளராக பி.பிரபு உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.