ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து, சேலம் மாவட்டம், மேட்டூரில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது. இதில் சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் சி.கருப்பண்ணன், மாவட்டப் பொருளாளர் வி.இளங்கோ, ஐஎன்டியுசி மூத்த தலைவர் ஜெயராமன், ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், மாதர் சங்கத்தின் எஸ்.எம்.தேவி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் என்.நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.