தருமபுரி, அக்.1- அருந்ததிய மக்களின் பாதை யை மாற்று சமூகத்தவர் ஆக்கிரமித் திருந்த நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஊத்து்பள்ளத்தில் சாலை அமைக்கும் போராட்டம் நடை பெற்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் பாதையை மீட்டு தருவதாக உறுதி யளித்தார். தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அக்ராகரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட ஊத்துப்பள்ளம் கிராமத்தில் அருந் ததியர் மக்கள் சிறு விவசாயம் மற்றும் கூலித் தொழிலாளர்களாக 4 தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்களின் விவ சாய நிலங்களுக்கும் சென்றுவர புறம்போக்கு (ச.எண்:157/1) மற்றும் ஓடை புறம்போக்கு (ச.எண். 159) தரிசு நிலத்தை பாதை யாக பயன்படுத்தி வந்தனர். இப் பாதையில் அருந்ததியர் மக்கள் வாகனங்கள், கால்நடைகள், பள்ளி குழந்தைகள் முதல் முதியோர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஊத்துபள்ளத் தில் உள்ள பாதையை மாற்று சமூகத்தை சேர்ந்த சிந்தாமணி என்பவரும், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஜெமினி மற்றும் ராஜன் என்பவரும் மாற்று பாதைக்கு வழி விடுவதாக கூறி, மக்கள் பயன்படுத்தி வந்த பாதை யை அழித்து விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் அருந்ததிய மக்களுக்கு மாற்று பாதைக்கு வழி விடுவதாக கூறிய நிலத்தில் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அருந் ததிய மக்கள் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர், கோட் டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோ ருக்கு பல முறை மனு அளித்தனர். இதனையடுத்து அரூர் வட்டாட் சியர் 4 மாதங்களுக்கு முன்பு நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு பாதை அமைத்து கொடுக்க நிலம் அளவீடு செய்யப்பட்டு, பணி துவங்கிய நிலையில் நிறுத்தப் பட்டுள்ளது.
பாதையை மறித்து விவசாய செய்யப்பவர்களுக்கு உடந்தை யாக உள்ள சிலர், பாதை விட வேண்டுமென்றால் அந்த பாதை யில் நடக்கும் ஒவ்வொரு குடும்ப மும் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் நிலத்திலிருந்து பாதை நிலத்திற்கு சரிசமமாக நிலம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி யுள்ளனர். அந்த பாதையில் நடக்கும் பள்ளி குழந்தைகளை வேப்ப மரத்தில் கட்டி வைத்து அடிப்போம் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உள்ள அரசு ஊழியர்களை மீதே பொய் வழக்கு போட்டு வேலையை விட்டு தூக்கி விடுவோம் என்றும் மிரட்டி வரு கின்றனர். எனவே, ஊத்துப்பள்ளம் அருந் ததியர் மக்களின் ஆக்கிரமிப்பு சாலையை மீட்டு தரவேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினமான செப்டம்பர் 30ஆம் தேதி யன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஊத்துப் பள்ளத்தில் சாலை அமைக்கும் போராட்டம் நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இந்த போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் டி.செல்ல கண்ணு தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவர் ஆதவன் தீட்சண்யா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலை வர் பி.ஜெயராமன், மாவட்டச் செய லாளர் வழக்கறிஞர் டி.மாதையன், மாவட்ட பொருளாளர் கே. கோவிந்தசாமி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செய லாளர் சோ.அருச்சுணன், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அருள்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் வி.மாது, பி.சங்கு, எம்.கே.ராமன், மா.தேவன், எஸ்.வெள்ளிங்கிரி, கே.சிவாஜி, டி.மாரியப்பன், டி.ஜி.சம்பத் ஆகியோர் முன்னின்றனர். இந்நிலையில், போராட்ட இடத்திற்கு வந்த அரூர் வட்டாட் சியர் கனிமொழி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலு வலர் சங்கீதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சங்க தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அக்டோபர் 7ஆம் தேதியன்று வட்டாட்சியர் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அருந்ததியர் மக்களுக்கு பாதை அமைத்து தரப்படும் என உறுதியளித்து எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.