districts

img

செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் புதிய வாய்ப்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனை

திருப்பூர், ஜன. 8 - செயற்கை நூலிழை ஆடை தயா ரிப்பில் புதிய வாய்ப்பு இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு  ஆடை தயாரிப்புத் துறை நிபுணரான சுனில் ஜின்ஜின்வாலா தெரிவித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தின் இளம் ஏற்றுமதியாளர்கள் துணைக் குழு சார்பில் கடந்த வெள்ளியன்று நிபுணர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் டெக்னோ ஸ்போர்ட் நிர்வாக இயக்கு நர்களில் ஒருவரான சுனில் ஜின்ஜின் வாலா பங்கேற்று செயற்கை நூலிழை  துணி மற்றும் ஆடை தயாரிப்பு  தொடர் பாக தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு இளம் ஏற்றுமதி யாளர் துணைக்குழுத் தலைவர் தினேஷ் வரவேற்றார்.  இந்திய ஏற்றுமதி கூட்டமைப்புத் தலைவரும், ஆயத்தஆடை ஏற்றுமதி அபிவிருத்திக் கழக தென்னகப் பொறுப் பாளருமான ஏ.சக்திவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உள்ள பிரகாச மான வர்த்தக வாய்ப்புகளை எடுத்து ரைத்தார். செயற்கை நூலிழை ஆடை  உற்பத்திக்கு அரசு மானியம் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்குவது பற்றி  எடுத்துக் கூறினார்.

ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசுகையில், உலகளாவிய போட்டிகளை எதிர் கொண்டு வலிமையுடன் வர்த்தகத்தில் உயர செயற்கை நூலிழை ஆடை தயா ரிப்பில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது  காலத்தின் தேவையாக உள்ளது என் றார். ஏற்றுமதியாளர் சங்கப் பொதுச்  செயலாளர் திருக்குமரன் சிறப்புரை யாற்றினார். இதைத்தொடர்ந்து சுனில் ஜின்ஜின்வாலா பேசுகையில், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி யில் உள்ள நுணுக்கங்கள், நுட்பங்கள்,  சந்தையின் தேவை, சந்தை வாய்ப்பு கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பருத்தி ஆடை உற்பத்திக்கு தேர்ச்சி அடைந்ததைப் போல செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியிலும் தேர்ச்சி அடையலாம். அதற்கேற்ப அடிப்படை  கட்டமைப்பில் செய்ய  வேண்டிய மாற்றங்கள், செலவி னங்கள் பற்றி கூறினார். மேலும் செயற்கை நூலிழை ஆடை தயா ரிப்பில் உலகளவில் அதிகம் விரும்பப் படும் சீனா, தைவான், கொரியா போன்ற  நாடுகளில் தயாரிக்கப்படும் அதே தரத்தில் இங்கும் தயாரிக்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும் அமெரிக்காவில் இறக்குமதியாகும் செயற்கை நூலிழை ஆடைகளில் 60  சதவிகிதம் சீனாவில் இருந்து மட்டுமே செல்கிறது. நாம் சரியாக முயற்சி செய் தால் அதில் பெரும்பங்கை கைப்பற்ற  இயலும், என்றார். இதையடுத்து நிகழ் வில் பங்கேற்றோர் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். துணைக்குழுத் துணைத் தலைவர் சரண்ராஜ் நன்றி கூறினார்.