districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கூடலூர் புதிய பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு கூடுதல் நிதி

உதகை, ஜூன் 26- கூடலூரில் புதிய பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக கூடுதலாக ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா, கேரளா மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட் டத்துக்கு வரும் சாலையில் கூடலூர் நகரம் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கூடலூர் புதிய பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நிலையில், அங்கு போதிய இட வசதி இல்லை. இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநி லங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கூடலூர் நகர சாலையோரம் நிறுத்தி வைக்க வேண்டிய நிலையுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது. இதனால் புதிய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.4.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் வணிக வளாகங்களுடன் கூடிய புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து போக்குவரத்து பணிமனை விரிவாக்க பணியும் நடைபெற்று வருகிறது. இது வரை 75 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  மண்டல பொது மேலாளர் நடராஜன் கூடலூர் பணிமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், புதிய பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக கூடுதலாக ரூ.63 லட் சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தின் பின்புறம் புதிதாக கட்டப்பட்டுள்ள பணி மனைக்கு செல்ல சாலை அமைக்கப்படும். தொடர்ந்து மீத முள்ள பணிகளும் விரைந்து முடிக்கப்படும். மேலும், 3 மாதங் களில் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும், என்றார்.

செல்போன் பழுது நீக்கம் செய்யும் பயிற்சி

ஈரோடு, ஜூன் 26- கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவசமாக செல்போன் பழுது நீக்கம் செய்யும் பயற்சி அளிக்கப்படுகிறது. ஜூலை 3 முதல் 7ஆம் தேதி வரை 30 நாட்கள் நடைபெற  உள்ள பயற்சியில் இருபாலரும் சேரலாம்.  சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சியின் முடிவில் சான்றி தழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 18-45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சி யில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2 ஆம் தளத்தில் அமைந்த கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலை யத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 8778323213, 7200650604, 0424-2400338 என்ற எண்களில் தொடர்பு கொள்ள லாம்.

மிரட்டி பணம் பறித்தவர் கைது

கோவை, ஜூன் 26 – கோவை போத்தனூர் சாரதா மில் சாலையில், டாஸ்மாக் பாரில் மேற்பார்வையாளராக உள்ள முனியசாமியிடம்,  அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் முனியசாமியிடம் மது பாட்டில் வாங்க பணம்  கேட்டார். இவர் கொடுக்க மறுக்கவே, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென் றார். இது குறித்து முனிய சாமி அளித்த புகாரின் பேரில், பிரசாந்த் என்பவரை போலீ சார் கைது செய்தனர்.

விளையாட்டு பாட வேளையில் மற்ற பாடங்களா?

சேலம், ஜூன் 26- விளையாட்டு பாட வேளையில், மற்ற  பாடங்களை நடத்தக்கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித் துள்ளார். சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி  ஒன்றியம், அத்தனூர்பட்டி ஊரக விளை யாட்டு மைதானத்தை ஆட்சியர் செ.கார் மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். அப்போது அவர் கூறுகையில், இளைய தலைமுறையினருக்கு விளையாட்டில் ஆர் வத்தை ஊக்குவிக்கும் போது எதிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய  தேவைகள் குறையும். ஆரோக்கியமான கிராம சமுதாயத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 20 ஊராட்சி ஒன்றி யங்களில் 385 கிராம ஊராட்சிகளில் விளை யாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள் ளன. குறிப்பாக, ஊரக விளையாட்டு மைதா னம் தரமுடன் நீண்ட நாட்களுக்கு இளை ஞர்கள் பயன்படுத்தும் வகையில், ரூ.4 கோடியே 66 லட்சத்தில் பேவர் பிளாக் நடை மேடை, பேவர் பிளாக் நடைபாதை, பேவர்  பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. எனவே விளையாட்டு மீதான ஆர்வத்தை பெற்றோர் மற்றும் ஆசிரி யர்கள் அதிகரிக்க செய்ய வேண்டும். மேலும், விளையாட்டு பாட வேளையில் மற்ற பாடங் கள் நடத்தக்கூடாது. விளையாட்டு போட்டி கள் மாணவ, மாணவிகளிடையே சிறந்த ஒழுக் கத்தை கற்றுத்தரும், என்றார்.

வீட்டு மனைப்பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

தருமபுரி, ஜூன் 26- மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி குடியிருந்து வரும், தருமபுரி மாவட்டம் அத்தி மரத்துப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், மனைபட்டா கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், அத்திமரத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மக்கள், 3 தலைமுறைகளாக, சுமார் 90 ஆண்டு களுக்கும் மேலாக தனது சொந்த செலவில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். குடியிருக் கும் வீட்டிற்கு பஞ்சாயத்து வீட்டு வரி, மின் இணைப்பு கட்டண ரசீது, குடிநீர் இணைப்புக் கான ரசீது ஆகியை முறையாக செலுத்தி வரு கின்றனர். கூலி வேலை செய்யும் இவர்கள் வேறு வீட்டுமனை வாங்க வசதி இல்லை. நீண்ட ஆண்டுகாலமாக வசிக்கும் வீடுக ளுக்கு மனைப்பட்டா கேட்டு பல அதிகாரிகளி டம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நாங்கள் குடியிருக்கும் வீட் டிற்கு மனைப்பட்டா வழங்கவேண்டும் என  100க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

இலவச சிறப்பு மருத்துவ முகாம்

ஈரோடு, ஜூன் 26- கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச பன் னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கருங்கல்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா  தலைமை ஏற்றார். அமைச்சர் சு.முத்துசாமி முகாமினை பார்வை யிட்டு. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இதில், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதேபோன்று, கவுந்தப்பாடி அரசு ஆண் கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் ரங்கசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய 4 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற் றது. இவற்றில், சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங் கேற்று பயனடைந்தனர். மேலும், முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 367 நபர்களுக்கு காப்பீடு திட்ட அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் வங்கியில் தீ

தருமபுரி, ஜூன் 26- தருமபுரி நகர காவல் நிலையம் எதிரே அமைந் துள்ள பிரபல தனியார் வங்கி யில் (ஐசிஐசிஐ வங்கி) மின் சார கசிவால் திங்களன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வங்கி முழுவதும் பெறும் புகை மண் டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவலறிந்து வந்த  தருமபுரி தீயணைப்பு நிலைய ஊழியர்கள், அரை மணி நேரத் தில் தீயை அணைத்தனர்.இவ்விபத்தில் பெரிய அள வில் பொருட்சேதமோ, உயிர் சேதமா நிகழவில்லை. இதன் பின் 10 மணிக்கு வழக்கமான பணிகள் துவங்கியது.

காதர் பேட்டை தீ விபத்தில் வாழ்விழந்த வியாபாரிகளுக்கு மேயர் நேரில் ஆறுதல்

திருப்பூர், ஜூன் 26 - திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் தீ விபத்து நடந்த இடத் தில் வணிகர்களை மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் நேரில்  சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு தீப்பிடித்து 50 கடைகள் எரிந்து சேதம் அடைந் தன. சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது. இந்த நிலையில் தீ விபத்து நடந்த  இடத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திங்களன்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தீ விபத்தால்  பாதிக்கப்பட்ட வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரி வித்தார். தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்க ளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் எந்தெந்த உதவி கள் செய்ய முடியுமோ, அவை அனைத்தும் செய்து தருவதாக  வணிகர்களுக்கு உறுதி அளித்தார்.

கோயில் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக புகார்

திருப்பூர், ஜூன் 26 - திருமுருகன்பூண்டி கோவிலுக்கு சொந்தமான ரூ.100  கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்க முயற்சி  நடைபெறுவதாக  அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். திருப்பூர் திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் ராக்கியபாளையம் கிராமத் தில் 8 ஏக்கர் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூபாய்  100 கோடி எனவும் , இந்த இடத்தை வெளியூரை சேர்ந்த  சிலர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கும் முயற்சியில்  ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் சென்று கேட்ட போது அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வரு வதாகவும், மேலும் இடத்தை அபகரிக்க துடிக்கும் நபர்கள்  பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அதிகாரி முன்னிலை யில் மிரட்டி வருவதாகவும் கூறினர். எனவே கோவில் சொத்தையும் பொதுமக்களையும் பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , பொதுமக்களை மிரட் டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூரில் திருநங்கைகளுக்கு குறை தீர்க்கும் முகாம்

திருப்பூர், ஜூன் 26- திருப்பூர் மாவட்டத்தில் திருநங்கைகள் மற்றும் திருநம்பி களுக்கு மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் ஐந்தாவது வாரிய கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவல் சாரா உறுப்பி னர்களால் திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட  கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட சமூக நல அலுவ லர்களால் நடத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ள படும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் தெரிவித் தார். அதன்படி சமூகநலத்துறை மூலம் திருப்பூர் மாவட்டத் தில் வசிக்கும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு மாதம்  தோறும் முதல் வார வெள்ளிக்கிழமையில் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெறும் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித் துள்ளார்.

திருப்பூரில் ஜூன் 30  விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்

திருப்பூர், ஜூன் 26- திருப்பூர் மாவட்டத்தில் வரும்  30 ஆம் தேதி மாவட்ட ஆட்சி யர் தலைமையில் கலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர்  அலுவலக அரை எண் 240 இல் விவசாயிகள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் நடைபெற உள்ளது.  விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயி களுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக் கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலு வலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.  மேலும், வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள்  நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங் கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு  செய்து கொள்ளவும், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்பட்டுள்ள கருத்துத் காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.35 ஆயிரத்துக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஜூன் 26- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடை பெற்ற ஏலத்தில்  2 விவசாயிகள் கலந்து கொண்டு 10 மூட்டை  நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்தனர். சேவூர் சுற்று வட்டார வியாபாரிகள் 2 பேர் கலந்து கொண்டு  மறைமுக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன்றுக்கு முதல்  ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,500 வரையிலும், இரண் டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன் றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம்  போனது. மொத்தம் ரூ.35 ஆயிரத்திற்கு ஏலம் நடைபெற் றது.

சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவோரால் பாதிப்பு: ஆட்சியரிடம் புகார்

திருப்பூர், ஜூன் 26 - தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகம் என்ற  பெயரில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகி றது, இதனால் பல குற்ற சம்பவங்கள் நடப்ப தோடு, வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆல்ட் ராக் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச் சங் கத்தினர் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலை மையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் திங்க ளன்று நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆல்ட்ராக் ஓட்டுநர் உரிமையாளர் நலச் சங் கத்தின் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் மனு  அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமி ழகத்தில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் இந்த போக்கு அதிக அளவில் உள்ளது. ஆன் லைன் வர்த்தகம் என்ற பெயரில் சொந்த பயன் பாட்டு வாகனத்தை தனி நபருக்கு வாட கைக்கு கொடுப்பதன் மூலம் பல்வேறு  குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. போலீ சார் இதனை கண்டு கொள்வதில்லை. இத னால் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவ்வாறு இல்லாவிட்டால், வாடகை வாக னங்களாக பதிவு செய்யப்பட்டதை சொந்த  வாகனங்களாக மாற்றி கொடுக்க போக்கு வரத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட் சியர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அவிநாசியில் உரிமம் இன்றி இயங்கிய  தனியார் பள்ளி வாகனம் பறிமுதல்

அவிநாசி, ஜூன் 26- அவிநாசியில்  உரிய உரிமம் இல்லாமல் இயங்கிய தனி யார் பள்ளி வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலர்  திங்களன்று பறிமுதல் செய்தார். தனியார் பள்ளி வாகனங்களில் சாலைத் தகுதிச் சான்று, வாகனம் உரிமம், அவசர வழிகதவு, முதலுதவிப்பெட்டி, தீய ணைப்புக் கருவி, வேகக் கட்டுப்பாட்டுக்கருவி உள்ளிட்டவை கள் முறையாக உள்ளதா என வட்டாரப் போக்குவரத்து அலு வலர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், அவிநாசி அருகே தெக்கலூரில் செயல்பட்டு வரும் தனியார்  பள்ளி வாகனத்தை அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவ லர் பாஸ்கர் திங்களன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப் போது அந்த வாகனத்துக்கு உரிய உரிமம் இல்லாதததும், வாகனத்தின் முன், பின் கேமரா பொருத்தப்படாமல் தகு தியற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது.

மணிப்பூர் கலவரம்: வேடிக்கை பார்க்கும் மாநில பாஜக அரசு

கோவை, ஜூன் 26- மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டுள்ள கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர, ராணுவத்தை அனுப்பி சமாதானப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கிறிஸ்துவ அமைப்பினர் மனு அளித்தனர். இதுதொடர்பாக திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்துவ மக்கள் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, கடந்த இரண்டு மாதகாலமாக மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரம், மதக்கலவரமாக மாறிக் கொண்டிருக்கிறது. குக்கி என்ற பழங்குடி மக்களும், மெய் டேவ் இனத்தவரும் நேரடியாக மோதிக்கொண்டிருக்கி றார்கள். ஆனால், மணிப்பூர் அரசாங்கமானது எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசாங்கமானது உடனடியாக தலையிட்டு, ராணுவத்தை அனுப்பி இரண்டு பிரிவினரை யும் சமாதானப்படுத்தி, ஒற்றுமையாக வாழ ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு ஏறக்குறைய சுமார் கிறிஸ்தவ தேவாலயங் கள் 225க்கு மேல் அடித்து நொறுக்கப்பட்டு, சூறையாடப் பட்டுள்ளன. பழங்குடி உட்பட 100க்கும் மேற்பட்ட மக்களை கொல்லப்பட்டுள்ளனர். பழங்குடியின குழந்தைகளை நாய் களைப் போல அடித்து, நடுரோட்டில் இழுத்து கொண்டு வந்து சுட்டதாக தெரிகிறது. இதை பார்த்தும் மணிப்பூர் அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல், “நாங்கள் தீவிர வாதிகளைத் தான் சுட்டுக் கொன்றோம்” என்று மாநில முதல்வர் பதில் கூறுகிறார். அங்கு மனிதநேயம் காக்க வேண்டும். வன்முறையைத் தவிர்த்து எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ நடவ டிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினர் மக்களுக்கு வீடு கள், அவர்களின் உடமைகள், தேவாலயங்கள் எரிக்கப் பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு குடியிருப்பதற்கு அர சாங்கமானது வீடு கட்டித்தரவும், அவர்களுடைய உரிமை களை அரசாங்கம் பெற்றுத்தரவும், எரிக்கப்பட்ட தேவால யங்களை மீண்டும் கட்டித்தர வேண்டும். ஒன்றிய அரசாங்கமா னது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அங்கு நிலவும் சட்ட - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திருட்டு

சேலம், ஜூன் 26- ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி ஊராட்சி மன்ற அலு வலகத்தில் குப்பை அள்ளும் பேட்டரி  வாகனத்தின் 50 ஆயி ரம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரி திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கொத்தம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அப்பகுதியில் 9க்கும் மேற் பட்ட துய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்ற னர். இந்நிலையில், ஊராட்சியில்  குப்பைகளை சேகரித்து எடுத்து செல்வதற்காக ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி  வாகனம் ஒன்று வழங்கப்பட்டது. இந்நிலையில், தூய்மை  பணியாளரான ரமேஷ் குப்பைகளை சேகரித்து வந்தவர், இரவு வாகனத்தை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திங்களன்று காலை தூய்மை பணிக்காக தூய்மை பணியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு  நிறுத்தப்பட்டிருந்த பேட்டரி வாகனத்தை இயக்கிய போது  வாகனம் இயங்கவில்லை. இதனை எடுத்து ஓட்டுநர் ரமேஷ் என்னவென்று பார்த்துள்ளார். அப்போது வாகனத்தில் இருந்த பேட்டரிகள் திருடு போனது தெரியவந்தது. இதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர் ரமேஷ் உட னடியாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆத்தூர் ஊரக  காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த  காவல் துறையினர் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் திருட்டு: ஆட்சியரிடம் சிபிஎம் மனு 

நாமக்கல், ஜூன் 26- நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலரு மான சுரேஷ் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில் தெரி வித்துள்ளதாவது, எலச்சிபாளையம் அருகே தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால், மளிகை கடை,  டீக்கடை என பல்வேறு கடைகளில் உரிமையாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப் படுத்தி திருட்டு நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண் டும்.  மேலும், எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்பு சாலை விபத்துகள் நடைபெற்று வருவதால் விபத்துக்களை தடுக்க ஏற்கனவே இருந்தபடி வேகத்தடைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறைதீர் முகாம்

நாமக்கல், ஜூன் 26- நாமக்கல் மாவட்ட முன் னாள் படைவீரர்கள், முன் னாள் படைவீரர்களின் வித வையர்கள், படைவீரர்கள் மற் றும் அவர்களை சார்ந்தோ ருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில், செவ்வாயன்று (இன்று) மாலை 4 மணியளவில் நடை பெற உள்ளது. எனவே முன் னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் உள்ளவர் களின் குடும்பத்தார்கள் தங் களின் கோரிக்கை மனுக் களை நேரில் சமர்ப்பிக்க லாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.