தாராபுரம், ஏப்.4 - தாராபுரம் அரசு மருத்துவ மனையில் கூடுதல் கட்டட கட்டு மானப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தாராபுரம் அரசு மருத்துவ மனையில் ரூ.24கோடி மதிப் பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வினீத் தலை மையில், செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர். இதுகுறித்து, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறு கையில், தாராபுரம் அரசு மருத்து வமனையில் ரூ.24 கோடி மதிப் பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப் பட்டு வருகிறது. 6 தளங்கள் கொண்ட இந்த கட்டடத்தில் தரைத் தளம் 865 ச.மீட்டரிலும், மற்ற 5 தளங்கள் 820 ச.மீட்டர் என மொத்தம் 5785 ச.மீட்டர் அல்லது 62268 ச. அடியில் கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் வரவேற்பறை, கதிரியக்க அறை, சி.டீ ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறை ஆய்வகம் 2 எண்ணிக்கையிலும், அல்ட்ரா கதிர்வீச்சு அறை வெளிப் புற நோயாளிகளுக்கான இருதய சிகிச்சை அறை மற்றும் மருந்தக இருப்பு அறைகளும், முதல் தளத்தில் டயாலிசிஸ் வார்டு பணி மருத்துவர் அறை. பணி செவிலியர் அறை. தீவிர சிகிச்சை பிரிவு பதி வறை, சாய்தளம் கழிவறை வசதி களுடனும், இரண்டாம் தளத்தில் அறுவை அரங்கு 2 எண்கள், நோயாளிகள் அறுவை சிகிச் சைக்கு தயார் படுத்தும் அறை, பணி மருத்துவர் அறை, பணி செவி லியர் அறை, கழிவறை மற்றும் சாய்தள வசதிகளுடனும், மூன்றாம் தளத்தில் பெண்களுக்கான மருத் துவசிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, ஆண் களுக்கான அறுவை சிகிச்சை வார்டு மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர் அறை,
பணி செவி லியர் அறைகளும், நான்காம் தளத் தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு பெண்களுக்கான மருத்துவ சிகிச் சை பிரிவு. பணி மருத்துவர்அறை, பணி செவிலியர் அறை சாய்தளம் கழிவறை வசதிகளுடன் கட்டப் படுகின்றன. ஐந்தாம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப் பீடு திட்ட பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, சாய்தளம் கழிவறை வசதிகளுடனும், ஆறாம் தளத்தில் கண்சிகிச்சை பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்) இரத்த வங்கி, கூட்ட அரங்கம், சாய்தளம் கழிவறை வசதிகளு டனும் கட்டப்பட்டு வருகிறது என் றார். முன்னதாக, மருத்துவமனை யில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) கனகராணி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தியாக ராஜன் மற்றம் துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டார்கள்.