இந்தியா முழுவதும் தகவல் தொடர் பில், தபால் துறையின் செயல்பாடுகள், இன்றளவும் மிக முக்கிய பங்களிப்பாக உள்ளது. சீன எல்லை, லடாக் மற்றும் எளிதில் செல்ல சாத்தியம் இல்லாத பல பழங்குடி கிராமங்கள் வரையிலும், அரசுடன் மக்களுக்கு தொடர்புகள் தொடர்ந்து வர தபால் துறையின் பங்கு அளப்பெரியது. கோவை மாவட்டத்தின் முதல் தபால் நிலையமாக போத்தனூர் தபால் நிலையம் துவங்கப்பட்டது. ஆங்கி லேயர் காலத்திலேயே புகழ்பெற்ற தபால் நிலையமாகவும் இருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவதாக மதுக்கரையில் கடந்த 1939 ஆம் ஆண்டு கிளைத் தபால் நிலையமாக துவங்கப் பட்டது தான், தற்போதைய மதுக்கரை துணைத் தபால் நிலையம். தனியாருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1942 இல் இந்த தபால் நிலையம் இலாக்கா நிலையமாக தரம் உயர்த்தப் பட்டது. ஒரு காலத்தில் மிகவும் பரபரப் பாக காட்சியளிக்கும் இடமாகவும் இந்த தபால் நிலையம் செயல்பட்டு வந்தது. நாச்சிபாளையம், பிச்சனூர் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் தக்காளி சந்தைகள் செயல்பட்டு வந்ததால், தக்காளி விலை நிர்ணயத்தை அறிந்துக் கொள்ள விவ சாயிகள் தினமும் கூடி வந்தனர். 1942 இல் ஏ.சி.சி சிமெண்ட் நிறுவனம் நிலத்தை வாங்கிய போது, தபால் நிலை யம் மற்றும் ஊழியர்களுக்கான குடி யிருப்பையும் வழங்கினர். அப்போது தபால் நிலையத்திற்காக ரூ.1 மட்டுமே வாடகையாக அந்நிறுவனம் பெற்றது. தொடர்ந்து விவசாயிகளுக்கு மிகவும் பயனுல்லதாகவும், எளிதில் மக்கள் வந் துச் செல்ல கூடிய பகுதியில் இருந்தது, கூடுதல் பலமாக இருந்தது. அதே போல வாளையாறு எல்லையில் உள்ள சின்னாம்பதி உள்ளிட்ட சில பழங்குடி கிராமங்களுக்கு கடித போக்குவரத்து, மனித உரிமைகள் பிரச் சனை ஏற்பட்ட போது, அங்கு தனியாக தபால் பெட்டியை வைத்து, அதன் மூலம் கடித போக்குவரத்துக்கு உதவியது. பல வரலாறுகளை உள்ளடக்கிய மதுக் கரை தபால் நிலையம் சுமார் 80 ஆண்டு களுக்கு பின் இடமாற்றம் செய்யப் படப்பட உள்ளது. ஏ.சி.சி நிறுவனம் கனி மவளம் எடுக்கப் போடப்பட்ட ஒப்பந் தம் நிறைவடைந்த நிலையில், அதன் செயல்பாடுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.சி.சி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்து களை அதானி நிறுவனம் வாங்கியுள் ளது. இதனால் தபால் நிலையம் உள்ள இடத்தை காலி செய்ய அறிவுறுத்தப் பட்டு, அருகே உள்ள மரப்பாலம் பகுதிக்கு இடம் மாற்ற நடவடிக்கைக ளில் தபால் துறையும் இறங்கியுள்ளது. பாலக்காடு நெடுஞ்சாலை ஓரத்தில் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக உள்ள இந்த தபால்நிலையத்தின் இடத்தை மட்டுமாவது அதானி நிறுவ னம் வாடகைக்கு வழங்கியிருக்கலாம் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக செயல் பட்டு வந்த மதுக்கரை தபால் நிலை யத்தை அதே இடத்தில் தொடர ஒன்றிய அரசும் அறிவுறுத்தலாம் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ந.நி