districts

img

3 மாதங்களுக்கு ஒரு முறை அதாலத் கூட்டம்

ஈரோடு, மே 17- மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதா லத் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பிஎஸ் என்எல்இயு கோரிக்கை ஏற்கப்பட்டது. ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலா ளர் அலுவலகத்தில் உள்ள மாநாட்டு மண் டபத்தில் அதாலத் கூட்டம் நடைபெற்றது. பொது மேலாளர், உதவி பொது மேலாளர்,  உள் நிதி ஆலோசர் மற்றும் தொழில்முறை திறன் மதிப்பீட்டாளர் உள்ளிட்டோர் நிர் வாகத் தரப்பில் கலந்து கொண்டனர். அகில இந்திய பிஸ்என்எல் ஓய்வூதியர்  சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர்  என்.குப்புசாமி. மாவட்ட உதவிச் செயலாளர்  எஸ்.மாணிக்கம், சி.விசுவநாதன், மாவட்டப் பொருளாளர் வி.மணியன், ஈரோடு மேற்கு கிளைச் செயலாளர் பி.சவுந்தரராஜன், தெற்கு கிளை செயலாளர் சொங்கப்பன், சோலார் கிளை தலைவர் என்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அகில இந்திய பிஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பொதுவான 12 பிரச்ச னைகளும், மருத்துவ காப்பீடுத் தொகை வராதவர்கள் 54 பேருடைய கேட்பு மனுக் களும், மருத்துவ பில் வராதவர்கள் 19  பேருடைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட் டன. நிர்வாகத்தின் தரப்பில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனித்தனியாக விளக்கம் கொடுக்கப்பட்டது. அத்துடன் வரும் காலங்க ளில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை அதா லத் நடைபெற வேண்டும் என்ற சங்கங்கத் தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

;