பொள்ளாச்சி, நவ.17- பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையை, ஆறு வழிச்சாலையாக தரம் உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக் கப்படும் என, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், மரபேட்டையில் இருந்து ஊஞ்சவேலம் பட்டி வரை இருபுறமும் சர்வீஸ் சாலையில் இரும்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இருப்புறங்களிலும் பள்ளி கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் அதிகள வில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக, பொதுமக்கள் குற் றஞ்சாட்டினர். இதையடுத்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி மின்மாயனம், சின்னாம் பாளையம் மின்நகர் ஊஞ்சவேலம்பட்டி உள்ளிட்ட இடங்க ளில் நெடுஞ்சாலைத்துறையினருடன் இணைந்து ஞாயி றன்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அவர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், மரபேட்டையிலிருந்து தொழிற் பேட்டை வரை இருபுறமும் சர்வீஸ் சாலைகயில் இரும்பு தடுப்பு கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டு, ஆறு வழிச்சாலை யாக விரைவில் தரம் உயர்த்தப்படும், என்றார். இந்த ஆய் வின்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, திமுக நகரச் செயலாளர் நவநீத கிருஷ்ணன், ஒன்றியச் செய லாளர் காணியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.