சேலம், ஜன.15- தமிழகத்தில் கொரோனா பர வல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து சிறை களிலும் கைதிகளை சந்திக்க தடை விதிக்கப்பட்டு, வீடியோ கால் மூலம் உறவினர்கள் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 3 ஆவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவிவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. கடந்த கொரோனா அலை யின்போது கைதிகளை உறவினர்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதை யும் தாண்டி சிறைக்குள் கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து செல்போனில் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரை சந்தித்து பேசு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி மத்திய சிறைகளில் கைதிகள் வாரத் திற்கு 5 நாட்கள் 5 நிமிடம் குடும்பத்தினரு டன் பேசி வந்தனர். அதன்பிறகு கொரோனா தொற்று பரவல் குறைந்துவிட்டதை அடுத்து நேரடியாக சிறையில் சந்தித்து வந்தனர். இந்நிலையில், தற்போது 3 ஆவது அலையில் அதிவேகமாக கொரோனா பரவி வருவதால் ஜன.13 ஆம் தேதி முதல் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் சுமார் 18 ஆயிரம் கைதிகள் தற்போது சிறையில் உள்ளனர். இவர்க ளுக்கு செல்போன் வீடியோ கால் மூலம் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய சிறைகளில் தான் இந்த வீடியோ கால் மூலம் உறவினர்கள் பேச முடியும். அதேபோல் மாவட்ட சிறைகளிலும் கைதிகளை சந்தித்து பேசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.