கோவை, மே 6- கோவை மற்றும் திருப்பூரில் கெட்டுப்போன ‘ஷவர்மா’ உணவுகளை, உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். கோவை உணவு பாதுகாப்புத் துறையினர் மாநகர பகுதி களில் உள்ள உணவகங்களில் வெள்ளியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நிய மன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், பீளமேடு, சரவணம்பட்டி சிங்காநல்லூர் மற்றும் ஒண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 73 உணவகங்க ளில் நடத்தப்பட்ட ஆய்வில், கெட்டுப்போன ‘ஷவர்மா’ என்ற உணவுகளை விற்பனை செய்ய வைத்து இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 57 கிலோ கோழிக்கறி உள்ளிட்ட ஷவர்மா உணவு மூலப்பொருட்களை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். மேலும், அவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 35 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, பேருந்து நிலையம் அருகில் சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் அதிரடி ஆய்வு மேற் கொண்டனர். இந்த ஆய்வின்போது 4.5 கிலோ கெட்டுப் போன மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், கெட்டுப்போன கோழி இறைச்சியை பதப்ப டுத்தி பயன்படுத்தியது மற்றும் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டத் தின் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். சவர்மா, பார்பிகியூ சிக்கன் உள்ளிட்ட உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் அவை சுத்தமானதாகவும், சரியான வெப்பநிலையில் சமைத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.