நாமக்கல், மே 16- சட்டவிரோதமாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டி கடத்தியவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், 87 கவுண்டம்பாளையம் ஊராட்சி யில் குமாரமங்கலம் இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தனி நபர் ஒருவர் ரியல் எஸ்டேட் வியாபார நோக் கத்தோடு, அரசு நிலத்தில் உள்ள பனைமரம், வேப்பமரம் மற்றும் புங்கமரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி எடுத் துள்ளனர். இரவு நேரத்தில், ஜேசிபி இயந்தி ரத்தை கொண்டு வேரோடு வேராக பிடுங்கி எடுத்து லாரிகள் மூலம் கடத்தி சென் றுள்ளனர். இந்த மரங்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது என தெரிய வருகி றது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இச்செயலுக்கு அரசு அதிகாரிகள் சிலர், துணை போவ தாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனையடுத்து, சட்டவிரோதமாக மரங் களை வெட்டி கடத்தி சென்ற சமூக விரோதி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமாரமங்க லம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மூத்த தோழர் சி.சுந்த ரம் தலைமை ஏற்றார். ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்.சு.சுரேஷ். எலச்சிபாளையம் மேற்கு கே.எஸ். வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.பழனியம்மாள். ஒன்றிய குழு உறுப்பினர் கள் சத்திவேல், கிட்டுசாமி, ரமேஷ், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சத்திவேல் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.