திருப்பூர், ஜூலை 20- பிஎஸ்என்எல் சொத்துக்களை சூறையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளியன்று பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கம், தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங் கம், ஓய்வுபெற்றோர் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களின் சார் பில் திருப்பூர் மெயின் தொலை பேசி நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் சொத்துக்களை சூரையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஓய்வுபெற்றோர் சங்கச் செயலர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கக் கிளைத்தலைவர் குமர வேல் துவக்கி வைத்து பேசினார். ஒய்வுபெற்றோர் கிளை உதவிச்செயலர் பழனிவேல்சாமி கோரிக்கைகள் குறித்து பேசினார். மாநில உதவிச்செயலர் முஹம்மது ஜாபர், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலர் அண்ணா துரை, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில உதவிச்செயலர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் பிஎஸ்என் எல் ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளைத் தலைவர் ராதாகி ருஷ்ணன் நன்றி கூறினார். இதில் பலர் பங்கேற்றனர்.