districts

img

தனி குவளை: தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்ட அறிவிப்பால் தீர்வு

ஈரோடு, டிச.21- சாதிய வன்மத்தோடு தனி குவளை முறையை கடைபிடிப்பதை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியி னர் உக்கரம் பகுதியில் அறிவித்த நேரடி நடவடிக்கையின் காரணமாக தீர்வு ஏற்பட் டுள்ளது.  சத்தி வட்டத்திற்குட்பட்ட உக்கரம் ஊராட்சி பகுதிகளில் உள்ள மில் மேடு, மேட்டுக்கடை பகுதிகளில் உள்ள உணவகங்கள், டீ கடை களில், பட்டியல் இன மக்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிட முடியாத அவல நிலை  நிலவுகிறது. டீ- கடைகளில் தனி டம்ளர், பட்டி யலின மக்களுக்கு முடி வெட்டுவதில்லை. இந்நிலையில், தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்படுவோர் புகார் செய்தால் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை.  அதே சமயம் புகார் செய்தவர்களை வழிமறித்து தாக்குவது, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, வேலை கொடுப்பதில்லை என்று சாதிய வன் மம் தொடர்கிறது.  இதுபோன்ற தீண்டாமை கொடுமைக ளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக இப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யும், பல்வேறு வெகுமக்கள் அமைப்புகளும் தொடர்ச்சியாக முயற்சித்து வந்தது.

இந்நி லையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் புதனன்று நேரடி நடவடிக்கை அறிவிக்கப் பட்டிருந்தது.  இதனையடுத்து, செவ்வாயன்று காவல் துறை கோபி துணை கண்காணிப்பாளர் சியா மளாதேவி தலைமையில் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடப்பட்டது. அதன் படி கடத்தூர் காவல் நிலையத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் காவல் ஆய்வா ளர் துரைப்பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணி யன், தாலுகா செயலாளர் கே.எம்.விஜய குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட செயலாளர் எம்.அண்ணா துரை, தமிழ்புலிகள் அப்துல்லா, விசிக பெரியகாளையன் ஆகியோர் ஊராட்சி மன்ற  தலைவர் முருகேசன், துணை தலைவர் புனிதா, கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி மற்றும் உணவகம், கடைஉரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்தையை தொடர்ந்து, கடை யின் உரிமையாளர்கள்  தவறை உணர்ந்து, இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டோம் என தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறை ஏற்பாடு  செய்த உணவை இருதரப்பையும் அமரவைத்து உணவருந்த வைத்தனர். இந் நிகழ்வு, சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னெடுப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இந்நிலையில், உக்கரம் பகுதியில் அறி விக்கப்பட்டிருந்த நேரடி நடவடிக்கை என்பது விளக்க கூட்டமாக நடைபெற்றது. இதில், விஜயகுமார் தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், ததீஒமு மாவட்ட செயலாளர் பி.பி.பழனிச்சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் உரையாற்றினர். இதில், கட்சியின் மூத்த தோழர்கள் கே.ஆர்.திருத்தணிகாச லம், எஸ்.முத்துசாமி, ஜி.பழனிச்சாமி, ஆர்.விஜயராகவன், மாணிக்கம், சுப்பிரமணி, யுவ ராஜ், பாலசுப்ரமணி மற்றும் சகாதேவன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.