தருமபுரி, ஏப்.15- அரூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப் படும் என தருமபுரி தொகுதி திமுக வேட் பாளர் ஆ.மணி வாக்குறுதி அளித்துள் ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், தீர்த்தமலை தீர்த்த கிரிஸ்வரர் கோவில் மலை ஏற ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும். அரூர் பேரூ ராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் கூட்டு றவு சேகோ சர்வ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனி யப்பன், ஒன்றியச் செயலாளர்கள் சரவ ணன், முத்துக்குமரன், ஆர்.வேடம் மாள், நாடாளுமன்ற உறுப்பினர் டி.என். வி.எஸ்.செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.குமார், விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா, தக வல் தொழில்நுட்ப அணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் தமிழழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.