districts

img

வெள்ளை நிறத்திலான நாகம்

கோவை, மே 4- கோவையில், தோல் நிறமி குறைபாடுடன் கூடிய வெள்ளை நிறத்திலான நாகம் பிடிக்கப் பட்டு மாங்கரை வனப்பகுதிக் குள் விடப்பட்டது. கோவை மாநகர் மற்றும் புற நகர் பகுதிகளில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து  வருகிறது. இந்நிலையில் கோவை – குறிச்சி, சக்தி நகர் பகுதி யில் மிகவும் அரிதாக காணப்படும் வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகம் மழையில் அடித்து வந்துள் ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், அந்த நாகத்தை பத்திரமாக மீட்டு மாங்கரை வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இந்நிலையில், வெள்ளை நிறத்தில் காணப்படும் பாம்பை வெள்ளை நாகம் என பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், மரபணு பிரச்சனை யால் தோல் நிறமி குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நாகம் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. மேலும் இது போன்று  தோல் நிறமி குறைபாடுடன் காணப்படும் வெள்ளை நிற நாகங் கள் மிகவும் அரிதானது என தெரிவித்தனர்.