கோவை, பிப்.6- செயற்கைக்கோள் உருவாவ தும், அதன் வெற்றியும் பல்லாயிரம் பேர் இரவு பகலாக கண்விழித்து செயல்பட்ட உழைப்பின் வெற்றி என கோவையை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி பிரபு கல் லூரி மாணவர்களுடனான கலந்து ரையாடலில் தெரிவித்தார். கோவை அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரியில் வளா கத்தில் இஸ்ரோ விஞ்ஞானி முனை வர் சி.பிரபு, கல்லூரி மாணவர்க ளுடனான கலந்துறையாடல் நிகழ்ச்சியில் வியாழனன்று நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி பிரபு கூறுகை யில், நான் இங்கு சில விஷயங் களை மாணவர்களோடு பகிர்ந்து கொள்வது அவர்களுடைய எதிர் காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும், இன்றைய சமுதாய மாணவர்கள் விஞ்ஞானம் குறித்த தகுந்த அறிவோடு தான் இருக்கி றார்கள். நாம் அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது பாடநெறி திருத்தம் மட்டும் தான். அதேபோல அவர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு ஆகியவை களை நாம் தான் வழங்க வேண்டும். படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். இருக் கும் வாய்ப்புகளை தகுந்த முறை யில் பயன்படுத்திக் கொள்ள வேண் டும். நாலு இடங்கள் தான் இருக்கி றது என்றாலும் அந்த நான்கு இடங்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். குறைந்தபட்ச இலக் கினை மனதில் பதிய வைத்துக் கொண்டு பயணம் செய்ய வேண் டும். மாணவர்களுக்கு தேவை யான அனைத்துமே யூடியூப் போன்ற வலைதளங்களில் உள் ளது. அவர்கள் இதில் எது தேவை எது தேவையில்லை என்பதை தெரிந்து பயன்படுத்த வேண்டும். இரண்டு செயற்கைக்கோள் களை இணைக்கும் போது சவா லாக இருந்தவை எது என்று கேள்விக்கு? அது ஒரு கூட்டு முயற்சி, பல்லாயிரம் பேர் இணைந்து தூங்காமல், இரவு பக லாக வேலை செய்த ஒரு செயல். அதில் நானும் ஒரு சிறிய பங்காற்றி யதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதில் சவாலான அமைப்பு என்ன வென்றால், அனைத்து துணை அமைப்புகளும் சரியான நேரத்தில் சரியான முறையில் வேலை செய்ய வேண்டும். அந்த சமயத்தில் அது சரி யாக இருந்ததால், பல பேரின் உழைப்பால் வெற்றி கிடைத்தது. எதிர்காலத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் தெளிவான இலக்கை நோக்கி பயணிக்க வேண் டும். அதற்கான படிகளையும் வலு வாக அமைக்க வேண்டும். முதல் அடி மட்டுமே நாம் தைரியமாக எடுத்து வைக்க வேண்டும். மற்றவை தானாக நடக்கும். வானி யல் அறிவியலில் தோல்விகள் கிடையாது. அதை பாடமாக மட் டுமே கற்றுக்கொள்கிறோம். அந்த பாடம் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். மாணவர்கள் கட்டாயமாக அச்சமின்றி முடிவு களை எடுத்து முன்னேற வேண்டும். நேர மேலான்மை மிகவும், முக்கி யம், வாய்ப்புகளை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.