கோவை, ஜூலை 17- உக்கடம் அருகே புட்டுவிக்கி சாலையில் திடீரென சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. உடனடி யாக மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் ஏற் பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சி, 79 வது வார்டுக்குட் பட்ட பகுதியான உக்கடம் - புட்டுவிக்கி இடை யிலான சாலையில் திங்களன்று மாலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. சாலையின் நடுவே ஏற்பட்ட இந்த திடீர் பள்ளம் காரண மாக போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப் பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் உடன டியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பகுதியை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் அதிகாரிகள் பள் ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள னர். பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதி யில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டி ருந்த நிலையில், குழாய் உடைந்து சாலை யில் பள்ளம் ஏற்பட்டு சேதம் ஏற்பட்டு இருப்ப தாகவும், இந்த பாதிப்பு எந்த அளவு இருக் கின்றது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இந்த பள்ளம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப் படும் என மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் தெரிவித்தார்.