districts

img

தேயிலை தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு

உதகை, அக்.12- கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் 10 நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் பிடித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்குட்பட்ட பிக்காபதி பிரிவு, பெரகனி நெடுகுளா கிராமத்தில் குடி யிருப்புகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து  கிடந்தது. இதை பார்த்து  அதிர்ச்சியான தொழிலாளர் கள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.  இதுகுறித்த தகவலின் பேரில் வனசரகர் செல்வ குமார் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் குட்டன், வன காவலர் ராஜேஷ் உள் ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து தேயிலை  தோட்டத்தில் படுத்து கிடந்த  10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர். இதன்பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.