districts

img

பொது இடம் ஆக்கிரமிப்பு துணைபோகும் காவல்துறை; மறியல்

தருமபுரி, டிச.22- தருமபுரி அருகே பொது பயன்பாட்டு இடத்தை ஆக்கிர மிப்பு செய்யும் தனிநபருக்கு துணைபோகும் காவல் துறையி னரை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே சீனூர்  கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கில் உள்ள 22 சென்ட் நிலத்தை ஊர் பொதுமக்கள் திருவிழாக்கள், துக்க நிகழ்வு, சுபநிகழ்ச்சிகள் மற்றும் விவசாய பொருட்களை பயன்படுத் தும் தானிய களமாகவும், மேலும், பல்வேறு பயன்பாட்டிற்கு  அந்நிலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், அதேகிராமத்தை சேர்ந்த தனிநபர் அந்த இடத்தை ஆக்கிரமித்து தனது பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாகக்கூறி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர். இதனிடையே அந்த நபர் காவல் துறையை ஏவிவிட்டு மனு கொடுக்கும் கிராம மக்கள் மீது  பொய்வழக்கு பதிவு மிரட்டி வருகின்றனர். இந்நிலையில், வியாழனன்று அக்கிராமத்தை சேர்ந்த கலைச் சக்கரவர்த்தி (35) மற்றும் சபரி குமார் (27) ஆகிய இரு வரையும் மகேந்திமங்கலம் காவல் துறையினர் அழைத்து  சென்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையறிந்த கிராம மக்கள் அவர்களை விடுவிக்க கோரியும், ஆக்கிரமிப்பு செய் துள்ள நபருக்கு துணை போகும் போலீசாரையும் கண்டித்து பாலக்கோடு - ஓசூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து, சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்ற னர்.