கோவை, செப்.14- விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சட்ட ஒழுங்கை நிலைநாட்டிட வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடம் மனு அளிக்கப் பட்டது. கோவையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தும் அமைப்புகள், பொது மக்களுக்கு எவ்வித இடையூறு ஏற் படாமல் பாதுகாக்க வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறை களுக்கு உட்பட்டு சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் சிலைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இடங்களில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். புதிய இடங் களில் சிலை வைக்க அனுமதி அளிக்கக் கூடாது. கலவரத்தை தூண்டும் முழக்கங் களை எழுப்ப அனுமதிக்க கூடாது. மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் எந்த நடவடிக்கை யும் அனுமதிக்காமல் சட்ட ஒழுங்கை பாது காக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையாளர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கோவை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் யு.கே.சிவ ஞானம், திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, ஆதி தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார், தபெதிக மாநகர செயலாளர் சாஜித், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தின் நேரு தாஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, தமுஎகச மாவட்ட செயலாளர் கரீம், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், சிபிஐ(எம்எல்) ரெட் ஸ்டார் இனியவன், சிபிஐ(எம்எல்) லிபரேசன் வெங்கடேசன், அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோதி குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மனு அளித் தனர்.