கோவை, ஜன.30- கோவையில் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் திங்களன்று துவக்கி வைத் தார். தமிழகத்தில் நாளுக்கு நாள் உணவகங்கள் மீது புகார் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்த மாதம் புதி தாக 4 நடமாடும் பகுப்பாய்வகம் தமிழக அரசால் வழங்கப் பட்டு உள்ளது. இதையடுத்து, கோவையில் புதிதாக வழங்கப் பட்ட நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சி யர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் உணவகங்கள் அதிகரித்து வரு கிறது. இந்நிலையில், உணவகங்களில் வழங்கப்படும் உண வுப் பொருட்களின் தரமும் கேள்விக்குறியாகி வருகிறது. உணவு பொருட்களில் புழு, பூச்சிகள் இருப்பதாகவும், கெட்டுப் போன மற்றும் காலாவதியான உணவு பொருட்களை விநி யோகம் செய்வதாகவும் நாளுக்கு நாள் புகார்கள் வந்த வண் ணம் உள்ளன. எனவே நடமாடும் உணவு ஆய்வகம் மூலம் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து மதிப்பீடு சான்று தரப் படுகிறது. மேலும் மக்களிடம் விழிப்புணர் மற்றும் பயிற்சி வழங்கப்பட உள்ளது, என்றார்.