சூலூர், பிப்.15- சூலூரில் சோளத்தட்டு ஏற்றி வந்த மினி லாரி அருகில் இருந்த மின்கம்பியில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்துக்குள் ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் தப்பி னார். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையம் பகுதியில் உள்ள முருகசாமி என்பவரது தோட்டத் திலிருந்து பாலமுருகேசன் என்பவர் திருப்பூரை நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தோட்டக் கலைத்துறை அலுவலகம் முன்பாக வந்தபோது அங்கிருந்த தாழ்வான மின்கம்பியில் சோளத்தட்டுகள் உராய்வு ஏற்பட் டுள்ளது. இதனால், திடீரென சோளத்தட்டுகள் முழுவதும் தீ பரவியுள்ளது. இதனைப் பார்த்த லாரியை ஒட்டி வந்த பால முருகேசன் உடனடியாக லாரியை நிறுத்தியுள்ளார். பின்னர், பெருந் தீ பரவிய நிலையில், சம்பவம் தொடர்பாக சூலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் லாரியில் இருந்த சோளத்தட்டுகளை ஜேசிபி மூலம் கீழே தள்ளி பின்னர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லாரி பின்பக்கம் முழு வதும் தீ பிடித்து எரிந்தது. இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தில், சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான சோள தட்டுகள் இந்த விபத்தில் சேதமாகியுள்ளது.