சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு
கோவை, நவ.28- கோவை மாவட்டத்திற்குட்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகளில் கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை வடக்கு நகரக் குழு விற்குட்பட்ட கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். அதன்படி, மையக்கிளைச் செயலாளராக எஸ்.மோகன், கே.கே.புதூர் கிளைச் செயலாளராக எம்.ராஜ்பகதூர், பெரி யார் நகர் கிளைச் செயலாளராக கார்த்திக், நல்லாம் பாளையம் கிளை - ஆர்.ரத்தினசாமி, சிவில் சப்லேஸ் கிளை - எம்.முத்தையா, கண்ணப்ப நகர் கிளை - ஆர்.அருள்குமார், நாராயணசாமி லே அவுட் 7 கிளை - என்.பாலன், தில்லை நகர் கிளை -ஆர்.தேவராஜ், சங்கனூர் கிளை - ஜி.ஆர். ராகேஷ், வேதாம்பாள் நகர் கிளை - கே.கே.மணி, காமராஜ புரம் கிளை - என்.சௌந்திரராஜ், காமராஜ புரம் மாதர் கிளை - பி.சுமதி, தியாகி அப்பாய் மன்றம் - எஸ்.மணிகண்டன், மதியழ கன் வீதி கிளை - எஸ்.கே.பாரதி, நேரு வீதி மாதர் கிளை - ஆர். ராதாமணி, சம்பத் வீதி மாதர் கிளை - டி.மேரி, சாஸ்திரி ரோடு கிளை - வி.ஆனந்தன், குட்டி கவுண்டர் வீதி கிளை - கே.சேகர், மெயின் ரோடு கிளை - எஸ்.சம்பத்குமார், செக்கான் தோட் டம் கிளை - எஸ்.ஜெயராஜ், கணபதி புதூர் மாதர் கிளை -என். பரமேஸ்வரி, கணபதி புதூர் முதல் வீதி கிளை - எம்.ராஜா, கணபதி புதூர் 3 வது வீதி கிளை - எஸ். நாராயணசாமி, பகத் சிங் புரம் கிளை - என்.சுரேந்திரன், கட்டபொம்மன் வீதி கிளை - எம்.சுப்பிரமணி, சின்னசாமி நகர் மாதர் கிளை - கே.பங்கஜ வல்லி, சித்தா தோட்டம் கிளை - எஸ்.அமுதா, கணபதி கிளை - ஏ.செல்வராஜ், கணபதி அண்ணா நகர் கிளை - எம்.குமார், மணியகாரம்பாளையம் கிளை - பி.செல்வராஜ், ஜிகே புரம் கிளை - டி.செந்தில்குமார், ராக்காச்சி கார்டன் கிளை - என். மனோகரன், கணபதி மாநகர் கிளை - எம்.சுப்பிரமணி, பாரதி நகர் கிளை - எம்.கணேசன், காந்தி மாநகர் கிளை - கே.நாகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பாட்டனர்.
கோவை கிழக்கு
காமராஜபுரம் 1 வது கிளைச் செயலாளராக டி.இளைய ராஜா, காமராஜபுரம் 11 ஆவது கிளை - கந்தசாமி, காமராஜ புரம் பெண்கள் கிளை - மல்லிகா, சுப்பராயன் ரோடு கிளை - ரவிக்குமார், அண்ணாபுதுலைன் கிளை - சலீம், 7 ஆவது வட்ட கிளை - நாகேந்திரன், ஒன்றாவது கட்சிக் கிளை - என். சுப்ரமணி, வெங்கிடசாமி ரோடு ஆண்கள் கிளை - டி.சீனிவ சான், வெங்கிடசாமி ரோடு பெண்கள் கிளை - எம்.வேலுமணி, சித்தாபுதூர் அவுசிங் யூனிட் கிளை 1 - தர்மன், சித்தாபுதூர் அவுசிங் யூனிட் கிளை 1 - செல்வம், காட்டூர் கிளை - ஜி.தாமு, புலியகுளம் கிளை 1 - மகேந்திரன், புலியகுளம் கிளை 11 - நாக ராஜ், மசால் லே அவுட் பெண்கள் - தீபா, 66 ஆவது வார்டு பெண்கள் - சத்யாபாமா, ராமநாதபுரம் கிளை - பாரதி, ஆட்டோ லட்சுமி காம்பளக்ஸ் - செல்வம், ஆட்டோ டிடிசி கிளை - செல் வம், ஆர்ய வைத்யா கிளை - அசோக்குமார், கேரளா கிளப் 1 - ரவீந்திரன், கேரளா கிளப் 11 - என்.ராமச்சந்திரன், கேரளா கிளப் பெண்கள் - ஜி.வெற்றி செல்வி, கேடிசி கிளை - கே.ஆர்.மணி கண்டன், வ.உ.சி பார்க் கிளை - கே.கணேசன், ஆர்வி.ஹோட் டல் கிளை - ஆறுமுகம், கேபிள் கிளை - சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பீளமேடு
நேருவீதி கிளைச் செயலாளராக சி.சரவணகனேஷ், நேரு வீதி மாதர் - ஜெ.தமிழ்செல்வி, பி.ஆர்.புரம் கிளை - எ.ராஜேந்தி ரன், தண்ணீர் பந்தல் கிளை 2 - எம்.ஸ்ரீதர், தண்ணீர் பந்தல் மாதர் - டி.சுமதி, தண்ணீர் பந்தல் 2 - ஆர்.தினேஷ்பாரதி, வினோபாஜி நகர் கிளை - ஆர்.செல்வரத்தினம், பீளமேடு 26,27 ஆவது வட் டம் - பி.எ.சுப்பிரமணியம், கே.ஆர்.புரம் கிளை 1 - எம்.மோகன் ராஜ், கே.ஆர்.புரம் கிளை 2 - கே.மோகனசுந்தரம், கே.ஆர். புரம் மாதர் - பி.மரகதம், கே.ஆர்.புரம் தெற்கு கிளை 1 - எஸ். ரவிக்குமார், கே.ஆர்.புரம் தெற்கு கிளை 2 - எஸ்.கனி, இளங்கோ நகர் மாதர் - ஜெ.கண்ணகி, இளங்கோ நகர் - கே.இளையபாரதி, நேதாஜி நகர் - வி.ரவீந்திரன், நேதாஜி நகர் மாதர் 1 - வி.சந்திரா, நேதாஜி நகர் மாதர் 2 - ஆர்.ஜோதி, ஈ.பி காலனி - என்.சக்திவேல், அண்ணா நகர் - ஆர்.ராமசாமி, அண்ணா நகர் மாதர் - கே.சாந்தா, நந்தகோபால் வீதி - பாதுஷா, பழையூர் - கே.ரங்கராஜ், அண்ணா நகர் (பீளமேடு புதுார்) - ஜி.ஜெயபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சிங்காநல்லூர்
மசக்காளிபாளையம் கிளைச் செயலாளராக ஆர்.செல்ல துரை, வரதராஜபுரம் - எஸ்.தரணிகுமார், வரதராஜபுரம் மாதர் - ஆர்.ரம்யா, சிங்காரவேலர் 1 கேபிஎம் - சின்னு (எ) என்.பரம சிவம், பாரதியார் கிளை - சி.ராஜ்குமார், விபி. சிந்தன் 2 கேபிஎம் - ஏ.மனோகரன், சிங்காநல்லூர் 61 நந்தா நகர் - ஜெயமோ கன், சிங்காநல்லூர் 63 - வி.கே.மனோகரன், எஸ்ஐஎச்எஸ் காலனி - தியாகு, சூர்யா நகர் - ஐ.பாண்டியன், ஒண்டிப்புதூர் 59 வட்ட கிளை - யு.பி.சுப்பிரமணியம், ஒண்டிப்புதூர் 60 வட்ட கிளை - எம்.மணிகண்டன், ஆஞ்சநேயர் காலனி - ராஜேந்தி ரன், திருவள்ளுவர் நகர் - முத்துசாமி, காமாட்சியம்மன் கோயில் வீதி - எல்.ஜி.சிவக்குமார், புல்லுக்காட்டு கிளை - விமல், சாரமேடு - கே.மூர்த்தி, உப்பிலிபாளையம் - யு.பி.நாகேந்திரன், உப்பிலிபாளையம் மேற்கு - ஏ.ரெனீத்குமார், சவு ரிபாளையம் 1 - எஸ்.சக்திவேல், சவுரிபாளையம் 2 – மாரியப் பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
எஸ்.எஸ்.குளம் கிழக்கு
விளாங்குறிச்சி கிளைச் செயலாளராக கல்யாணி, 5 ஆவது வார்டு கிளை - பி.சண்முகம், சேரன்மாநகர் - பாரதி சங்கர், பாலாஜி நகர் - பாலசுப்ரமணியம், காளப்பட்டி - கே.மனோக ரன், நேரு நகர் - ஜெய பாத்திமா, அத்திகுட்டை - ஏ.வரத ராஜ், ஆர்.ஜி புதூர் ஒன்றாவது கிளை – ஏ.ஆறுமுகம், ஆர்.ஜி. புதூர் இரண்டாவது கிளை - ஆர்.வேல்முருகன், கிழக்குத் தொட்டிபாளையம் - ஆர். அருண்குமார், கைகோளபாளை யம் 1ஆவது கிளை - எஸ். சுப்ரமணியம், கைகோளபாளை யம் 2ஆவது கிளை – அமர்ந்தலிங்கம், குரும்பபாளையம் - கே.பிரபாகரன், கோவில் பாளையம் - எம்.முருகராஜ், கோட்டை பாளையம் - ஜெகநாதன், வையம்பாளையம் - ரங்க சாமி, கொண்டையம் பாளையம் - முத்துசாமி, லட்சுமி கார்டன் - பிரான்சிஸ், ஏ.எஸ்.குளம் - எம்.ரங்கசாமி, வடக்கு தொட்டி பாளையம் - கே.மதன்குமார், கோல்டு வின்ஸ் கிளை - சுப்பிர மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஐபிஎல் சூதாட்டம்: வாலிபர் மீது வழக்கு
தருமபுரி, நவ.28- செல்போன் மூலம் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், சந்தை தெரு பகுதி யைச் சேர்ந்தவர் ஹரி பிரசாத் (31). இவர் செல்போன் மூலம் ஐபிஎல் பெட்டிங் சூதாட்டம் நடத்துவதாக காரிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காரிமங்கலம் போலீசார் ஹரிபிரசாத்திற்கு சம்மன் வழங்கி, அழைத்து சென்று செல்போனை சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்ப திவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கவுன்சிலர் உயிரிழப்பு
கவுன்சிலர் உயிரிழப்பு கோவை, நவ.28- கோவை மாநகராட்சி கவுன்சிலர் எம். கிருஷ்ணமூர்த்தி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து நொய்யல் ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். கோவை மாநகராட்சியின் 56 ஆவது வார்டு கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான எம். கிருஷ்ணமூர்த்தி புதனன்று இரவு சூலூர் அருகே பட்டணம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றின் கரையில் சந்தேகத்திற்கிடமான முறை யில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சூலூர் போலீசாரின் முதற்கட்ட விசாரணை யில், கிருஷ்ணமூர்த்தியின் உடல் இரவு 9.30 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டது. அவர் நொய்யல் பாலத்தின் அருகே தனது காரை நிறுத்திவிட்டு ஆற்றங்கரையில் நடந்து சென்ற போது, கால் வழுக்கி சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர மாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அவரது உற வினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரியாதை இல்லாமல் பேசும் சீமான்!
மரியாதை இல்லாமல் பேசும் சீமான்! நாமக்கல், நவ.28- கட்சி நிர்வாகிகளை சீமான் மரியாதை இல்லாமல் பேசி வருவதால், நாம் நமிழர் கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட் டோர் விலகியுள்ளனர். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட் டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிய வினோத்குமார் என்பவர் வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நாம் தமிழர் கட்சியில் கடந்த 2009 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நாமக்கல் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந் தேன். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் 12 ஆண்டுகள் இணைந்து பணியாற்றினோம். கட்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். ஆனால், அவர் கட்சி நிர்வாகிகளை ஆலோ சிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நான் மட்டும் கட்சியில் இருந்தால் போதும்; ஓட்டு விழும் என நிர்வாகிகளை மரியாதை இல்லாமல் பேசுகிறார். மதச்சார்பின்மை பேசி விட்டு, தற்போது மதச்சார்புள்ள ஒரு கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார். இதனால் அதிருப்தியடைந்து ஏற்க னவே பல மாவட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகிவிட்ட னர். இந்நிலையில், நான் மற்றும் மகளிரணி, இளைஞரணியி னர் சுமார் 50 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுகி றோம், என்றார்.
சாலை வசதி இல்லாத மலைகிராமத்தில் பாம்பு கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
தருமபுரி, நவ.28- பென்னாகரம் அருகே சாலை வசதி இல்லாததால், பாம்பு கடித்த சிறுமியை தொட்டில் கட்டி கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னா கரத்தை அடுத்த வட்டுவனஅள்ளி ஊராட்சியில் அலகட்டு மலை கிராமம் அமைந்துள்ளது. இக்கிரா மத்தில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிரா மத்திற்கு எந்தவொரு அடிப்படை வசதியும் இதுவரை அரசால் செய்து தரப்படவில்லை. மலை சார்ந்த பகுதி என்பதால் கிராமத்தில் சாலை வசதி வேண்டி பலமுறை கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும், ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இந்நிலையில், அப் பகுதியைச் சேர்ந்த ருத்ரப்பா என்ப ரின் மகள் கஸ்தூரி (13), 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். தோட்டத் தில் வியாழனன்று கீரை பறித்துக் கொண்டிருந்த பொழுது, அவரை பாம்பு கடித்துள்ளது. இதனைய றிந்த உறவினர்கள் சிறுமியை மருத் துவமனைக்கு அழைத்து செல்ல சாலை வசதியில்லாததால், தொட் டில் கட்டி தூக்கி சென்றுள்ளனர். ஆனால், மலையை கடந்து சிங் காடு தார்ச்சாலைக்கு கொண்டு வரும்போது, சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை அமைத்து தாராமல் இருந்த அரசு அதிகாரிகளின் அலட் சியத்தால் சிறுமியின் உயிர் பறி போயுள்ளது. இனிமேலும் தாம தம் செய்யாமல் சாலை வசதி ஏற் படுத்தித்தர அரசு நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.