districts

img

அவிநாசி மக்களுக்கு ஒரு வேடிக்கை காட்சி அரங்கேற்றம்

அவிநாசி, அக். 16 – அவிநாசியில் பாஜகவின் அண்ணாமலை  மேற்கொண்ட “நடைபயணத்தை” பிரம் மாண்டமாகக் காட்டுவதற்காக அக்கட்சியி னர் அரசு நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பொது மக்களுக்கு பல்வேறு இடையூறு களை ஏற்படுத்தினர். இதனால் அரசு மருத் துவமனை, நீதிமன்றம் சென்றோர் கடுமை யாக அவதிப்பட்டனர். தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திங்க ளன்று அவினாசி சிந்தாமணி திரையரங்கம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை “நடை பயணம்” மேற்கொண்டார். இதனால் கால் நடை மருத்துவமனை வழியாக அரசு மருத் துவமனை, நீதிமன்றத்திற்கு செல்லும் பாதை  முன்னாள் டிஎஸ்பி அலுவலகம் முன்பாக  மறைக்கப்பட்டது. இதனால் ஒரு மணி நேரத் திற்கு மேலாக மக்கள் அவதிப்பட்டனர். அதே போல அரசு மருத்துவமனை முன்பாக மத்த ளம் அடித்து கோஷம் எழுப்பியும் நீண்ட  நேரம் சப்தம் செய்தனர். இதனால் நோயா ளிகள் அவதிப்பட்டனர். இதைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து  நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டனர். நடைபயணத்தின்போது அண்ணாமலை யின் மீது பூக்களைத் தூவ 150 கிலோவுக்கும்  மேற்பட்ட பூக்கள் மினி வேனில் கொண்டு வரப்பட்டது. இதை பாஜகவினர் சாலையில் இருபுறமும் கடை உரிமையாளர்கள், பாத சாரிகளிடம் வற்புறுத்தி கொடுத்து அண்ணா மலை மீது பூத்தூவும்படி கூறினர். பலர் விருப் பம் இல்லாதபோதும் வேறு வழியின்றி பூக்க ளைப் பெற்றுக் கொண்டு அதே இடத்தில் சற்று நேரம் கழித்து கீழே போட்டுவிட்டுச் சென் றனர்.

சிலர் பூவை வாங்க மறுத்தனர். பாஜக கோவை வடக்கு மாவட்ட செயலா ளர், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் தண்ணீர் கேன்களில் மோடி, அண்ணாமலையுடன், அவர் புகைப்படமும் கொண்ட ஸ்டிக்கரை ஒட்டி நடைபயணத்தில் வருவோருக்கு விநி யோகித்தனர். பாதுகாப்புக்கு வந்த காவல்  அதிகாரிகளுக்கு இந்த தண்ணீர் கேனை கொடுத்தபோது அவர்கள் வாங்க மறுத் தனர். பொதுமக்களுக்கு தீப்பெட்டி விநியோ கம் செய்தனர். தமிழக வத்திக்குச்சி ஆலை களை ஊக்கவிக்க சீனா லைட்டர்களை தடை  செய்த மத்திய அரசுக்கு நன்றி என்று குறிப் பிட்ட வாசகங்கள் அடங்கிய தீப்பெட்டிகளை மக்களுக்கு விநியோகித்தனர். அதிமுகவை ஸ்டிக்கர் பாய்  என்று விமர்சனம் செய்த  பாஜகவினரே ஸ்டிக்கர் ஒட்டி அரசியல்  செய்து வருகின்றனர் என அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர். ஒன்றிய அரசு முத்திரை பதித்த கவர் மெண்ட் ஆப் இந்தியா, புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, மினிஸ்டர் ஆஃப் கன்ஸ்யூமர்  அபயர்ஸ் என்ற பெயர் பலகை வாடகை காரில் கட்டப்பட்டிருந்தது. பின்புறம் நம்பர் பிளேட் இல்லாமல் முன்புறம் நம்பர் பிளேட்  மறைக்கப்பட்டு இந்த வாகனத்தை நடை பயணத்தில் பயன்படுத்தினர். அண்ணாமலை பிரச்சார பொதுக்கூட்டத் திற்கு பனியன் கம்பெனி உரிமையாளர்கள் சிலர் தங்கள் சொந்த பேருந்துகள் மூலம்  வடமாநிலத் தொழிலாளர்களை பிரச்சாரத் திற்கு அனுப்பி வைத்தனர்.   மற்றவர்களை வாய்க்கு வந்தபடி விமர் சிக்கும் பாஜகவினர் எல்லா வகையிலும் கூசா மல் முறைகேடுகளை செய்கின்றனர். மொத் தத்தில் அண்ணாமலை நடைபயணம் அவி நாசி மக்களுக்கு ஒரு வேடிக்கை காட்சியாக  அரங்கேறியது.

வெளிப்பட்ட பாசாங்குத்தனம்

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற தொடர் போராட்டத்தை முன்னெடுப்ப தற்காக ஆரம்பத்தில் அவிநாசி அத்திக்கடவு திட்டப் போராட்டக்குழு ஆரம்பிக்கப் பட்டது. அப்போது கட்சி சார்பற்ற அமைப்பு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அவிநாசிக்கு அண்ணாமலை வந்தபோது அந்த குழுவினர் அவ ருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அத் திக்கடவு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்ததால் அதிமுகவை ஆதரிப்பதாக தெரி வித்தவர்கள், இப்போது அதிமுக பாஜகவுடன் உறவு இல்லை என்று அறிவித்தபிறகு,  பாஜகவை ஆதரிப்பது எந்த அடிப்படையில்? என்ன நோக்கம்? என்று விவசாயிகள் கேட் கின்றனர்.  பொதுவான ஒரு நோக்கத்திற்காக பல்வேறு தரப்பினரும் சேர்ந்து கட்சி சார்பற்ற  அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்தோர் இப்போது பாஜகவை ஆதரிப் பதாக கூறுவது பாஜகவின் வழக்கமான பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தி இருக்கி றது என்றும் விவசாயிகள் கூறினர்.