உதகை, ஜன.8- உதகை படகு இல்லத்தில் ரூ.11 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப் பட்டு உள்ள மிதக்கும் மேடை சுற் றுலா பயணிகளை அதிகம் ஈர்த்துள் ளது. சர்வதேச சுற்றுலா தலமான நீல கிரி மாவட்டம், உதகைக்கு வரும் சுற் றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா வுக்கு அடுத்தபடியாக படகு இல்லத் திற்கு படையெடுத்து செல்கின்றனர். உதகை ஏரி 1824 ஆம் ஆண்டில் கட் டப்பட்டு, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரி, சுற்றுலா மற்றும் படகு சவாரிக்கு ஏற்ற இட மாகும். அமைதியான நீர், ஏரியிலி ருந்து தொடர்ந்து வீசும் குளிர்ச்சி யான காற்று மற்றும் அழகிய நிலப்பரப்பு ஆகியவை இங்கு ரம்மி யமான சூழ்நிலையை உருவாக்கும். உதகை படகு இல்லத்தில் 33 மோட் டார் படகுகள், 17 துடுப்பு படங்கள், 104 கால்மிதி படகுகள் மற்றும் ஒரு அவசர தேவைக்கான பாதுகாப்பு படகு உள்ளது.
இதனால், இங்கு வார நாட்களில் சுமார் 5 ஆயிரம் பேரும் வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயி ரம் பேரும் வந்து செல்கின்றனர். இத னால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு திட் டங்கள் செயல்படுத்த தமிழ்நாடு சுற் றுலா வளர்ச்சி கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உதகை படகு இல்லத் தில் ரூ.11 லட்சம் செலவில் மிதக்கும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. “புளோட்டிங் ஜெட்டி” எனப்படும் மிதக் கும் மேடை, செவ்வக வடிவில் (பிளாஸ் டிக் கேன் போன்று) சிறு, சிறு அமைப் பாக சேர்ந்து ஒரு சேர உருவாக்கப் பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பய ணிகள் இதில் நடந்து சென்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி யடைகின்றனர். மேலும், மிதக்கும் மேடையில் நடந்து சென்று படகு சவா ரிக்கு செல்கின்றனர். இதேபோல் உதகை படகு இல்லத்தில் சாகச சூழல் சுற்றுலா அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.