குளக்கரையில் ஆயிரக்கணக்கான லேசர் விளக்குகள் ஒளி உமிழும் புத்தாண்டு கொண்டாடத்தால், வலசை வரும் பறவைகளுக்கு ஆபத்து நேரிடும் என்றும், பறவைகளின் வரத்து குறைந்துவிடும் என சூழலியலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை, வாலாங்குளத்தில் மாந கராட்சியுடன் இனைந்து, பல்வேறு தனியார் அமைப் புகள் புத்தாண்டு கொண்டாடட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், 20 லேசர் விளக்குகள் ஒளி உமிழும் நிகழ்வும், 200க்கும் அதிகமான ட்ரோன்கள் பறக்கவிட் டும் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர மக்களை பொருத்த வரையில், திருவிழா, பெருவிழா போன்றவற் றிற்கு பொழுது போக்க பொருத்தமான இடங் கள் ஏதும் இல்லை என்பது உண்மையே. எனவே, ஸ்மார்ட் சிட்டி என்கிற திட்டத்தின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்து, கோவை மாநக ரத்தில் உள்ள குளங்களை சுற்றி அழகுபடுத்தி, வண்ணவண்ண மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டும், நடைபாதை, புல்வெளி என பல்வேறு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் குளங்களை பாதுகாக்க வேண்டும் என்கிற உந்துதலும், மக்களுக்கு பொழுதை போக்க இடம் என் கிற அம்சங்களும் இடம் பெற்றிருப்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில், இதுபோன்ற புத் தாண்டு கொண்டாட்டங்கள் சூழலை சீர் குலைக்கிறது என்கிற செயற்பாட்டாளர்களின் கருத்துக்களையும் புறந்தள்ள முடியாது. இதுகுறித்து சூழலியல் செயற்பாட்டாளர் கோவை சதாசிவம் கூறுகையில், ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதும், மகிழ்ச்சியு டன் வாழ்த்துகளைப் பறிமாறிக் கொள்வதி லும் நமக்கு எந்த வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை! இன்னும் சொல்லப்போனால் போதை இல்லாத, விபத்து இல்லாத, புத் தாண்டை விரும்புவோர்களின் நானும் ஒரு வன்.
இதுவரை வீதிகளில், விடுதிகளில், மண் டப அரங்குகளில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு கோவை, வாலாங்குளத்தில் நடைபெறும் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கோவை வரும் வலசைப் பறவைகளின் புகலிடங்களில் முதன்மையா னது வாலாங்குளம். நகரின் நடுவே சுமார் 160 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத் திற்கு நொய்யல் நீரே ஆதாரம். ஆண்டு முழு தும் இங்கு தேங்கும் நீரால் அருகில் உள்ள பகுதிகளில் நிலையான நீர்மட்டம் குறையா மல் உள்ளது. சதுப்பு நிலங்களையும் - அவற் றின் உயிர்ச்சூழலையும் பாதுகாக்க வேண்டி யது அனைவரின் கடமை என்று நீதிமன்றங்கள் அறிவுறுத்தி வந்தாலும். வாலாங்குளத்தில் பத்திற்கும் மேலான மின் கோபுரங்கள் அரை ஏக்கர் நிலத்தை விழுங்கி விட்டது. கழிவு நீரும், நகரக்குப்பைகளும் குளத்தின் சிறப்பு விருந் தினர்கள். இதுவெல்லாம் போதாது என்று வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி நிர்வாகத்திடம் அகப்பட்டுக்கொண்டது பெரும் துயரம். கரையோரம் இருந்த நீர்தாவரங்களை வேரு டன் பிடுங்கி எறித்து விட்டு கான்கிரீட் தளமாக மாற்றியதே நீர்ச்சூழலின் இருப்புக்கு எதிரா னது என்று அறியவில்லை எழிலார்ந்த நக ரம்.
கார்ப்பரேட் கலாச்சாரம் எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு உணர்த்த, வரும் ஆங் கிலப்புத்தாண்டை ஸ்மார் சிட்டியுடன் கைகோர்த்து “டிரயும்ப் எக்ஸ் பெடிஷன்ஸ்” என்ற பெரு நிறுவனமும் ஆங்கிலப்புத் தாண்டை வாலாங்குளத்தில் நடத்துகின்றன. சீனாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு என்று தடை செய்யப்பட்ட ஹீரியம் என்ற எல்.இடி பல்புகளு டன் மிதக்கும் 20 ஆயிரம் பாலூன்கள், ஒளி உமிழும் 300 ட்ரோன்கள், ஸ்கை லேண்டர்ஸ் எனப்படும் இரவை பகலாக்கும் பேரொளி வண்ண விளக்குகள், சின்னத்திரை நட்சத்தி ரங்களின் கேளிக்கை கள், விதவிதமான உண வகங்கள் என்று கலைகட்டும் ஆங்கிலப் புத் தாண்டு நிகழ்ச்சி நிரல் ரொம்பவும் ஆர்ப்பாட்ட மானது. நீர் தொகுதிகள் இரண்டு விதமான உயிர்ச் சூழலைக் கொண்டவை. நீரிலுள்ள எண்ணற்ற உயிர்களின் வாழ்வு இரவுதான் தொடங்கும். செயற்கை பேரொளியில், பெருங்கூச்சலில் அச்சமுறும் இவைகள் குளத்தை விட்டு வெளி யேறும். நமது ஒருநாள் கொண்டாட்டத்திற்காக, வெகு தொலைவில் இருந்து இங்கு மூன்று மாதங்கள் வாழ வரும் வலசைப்பறவைகளை ஒரு முறை இடையூறு செய்து விட்டால் பிறகு அவைகள் திரும்பி வருவது கடினம் என்கி றார்கள் இயற்கையாளர்கள். எல்லா உயிர் களும் இன்பம் எய்தும் விழாக்களை கொண் டாடி மகிழ்வோம்! வனப்பகுதி, நீர்நிலைகளில் இது போன்ற கொண்டாட்டங்களை தவிர்ப் போம், என்றார். கார்ப்பரேட் கலாச்சாரம் வணிக நோக் கத்தை அடிப்படையாகக் கொண்டவை! ஸ்மார்ட் சிட்டியில் வாழும் மனிதர்கள் விரைவில் இதனை உணர்வார்கள். பெரு நிறுவனத்தின் முகவர்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மக்கள் ஒற்றுமை விழாக்களை இல்லாமல் செய்து ஒரே இடத்தில் மக்களை குவித்து பிரமாண்டங்களைக் காட்டி மதி மயங்கச்செய்வார்கள் என்பதற்கு வாலாங் குளத்தில் நடைபெறுவதாகச்சொல்லப்படும் இவ்விழாவே சாட்சி. இது போன்ற விழாக்களை அனுமதிப்பது எதிர்காலத் துயரம் என வேத னையை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து சூழலியல் ஆர்வலர் யோக நாதன் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் கோவை குளங்களுக்கு வலசை வரும் பறவை களின் எண்ணிக்கை 62 சதவீதம் சரிந்துள்ளது. இதனை நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கோவையில் நொய்யல் ஆற்றின் வழித்தடங்களில் உள்ள நீர்நிலை களும், குளங்களும் ஆயிரக்கணக்கான பற வைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. உக் குளம், கிருஷ்ணாம்பதி, செங்குளம், வெள்ள லூர் குளம், சிங்காநல்லூர் குளம், ஆச்சான் குளம் உள்ளிட்ட குளங்களில் உள்ள நீர்வாழ் பறவைகளை கண்டறிய ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப் புகளின் முடிவில் கோவை குளங்கள், அதனை ஒட்டிய பகுதிகளில் 134 வகை பறவைகள் இருப் பது கண்டறியப்பட்டது. இதில், 31 வகைப் பறவைகள் வலசை வரும் பறவைகள். கடந்த 5 ஆண்டுகளின் கணக்கெடுப்பை ஒப்பிடுகை யில் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை 62 சதவீதம் அளவுக்குச் சரிந்துள்ளது என தெரியவந்துள்ளது. குறிப்பாக கோவை மாந கரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வாலாங் குளம், பெரியகுளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கரையோரங் களில் நடைபாதைகள், விளையாட்டு திடல் கள், படகு இல்லம் உள்ளிட்ட வசதிகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வாலாங்குளம் குளக்கரை யில் ஒளிரும் வண்ண லேசர் விளக்குகளுடன், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் பறக்க விடப் படுகின்றன. இதன் காரணமாக சூழலியல் மாற் றம் ஏற்பட்டு வலசை வரும் பறவைகள் எண் ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏராள மான இடங்கள் இருந்தாலும், சில தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் தூண்டுதலின் காரணமாக பல்லுயிர் சூழல் நிறைந்த குளங் களில் லேசர் ஒளி விளக்குகளை பாய்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க தவ றினால், ஆயிரக்கணக்கில் வலசை வரும் பற வைகள், கோவையில் உள்ள குளங்களுக்கு தங்களது வருகையை நிறுத்திக் கொள்ளும் அபாயம் உருவாகும். ஏற்கனவே வாலாங் குளத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக் கில் அதிநவீன விசைப்படகுகள் இயக்கப்படுவ தால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக அங்கு மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வாலங் குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்த்து திறந்தவெளி மைதானங்கள் மற்றும் தனியார் இடங்களில் நடத்த வேண்டும், என் றார். குளங்களை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில், குளக்கரையில் இருந்த பல்லாயிரக் கணக்கான அப்பாவி ஏழைஎளிய உழைப்பாளி மக்களை அப்புறப்படுத்திவிட்டு, அவர்களை மாவட்டத்தின் எல்லையில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் குடியிருப்பு கள் கட்டி ஒதுக்கிவிட்டதை மனசாட்சி உள்ள இயக்கங்கள் அறியும். குளங்களை பாது காக்கிறோம் என்கிற நோக்கத்திற்காக மக் களை அப்புறப்படுத்திவிட்டு, அதே இடத்தில் சூழலியலுக்கு விரோதமாக நிகழ்வுகள் நடத் துவது சரியா என்கிற கேள்விக்கு மாநகராட்சி நிர்வாகம்தான் பதில் சொல்ல வேண்டும்.
-கார்த்திக் மதிவாணன்