சேலம், ஜன.18- பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்பும் பொதுமக்களுக்காக, சேலம் கோட்டத்திலிருந்து 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வுள்ளது. சேலம், நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களை உள்ளடக்கிய சேலம் கோட்டத்தில் பல்வேறு வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்டம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்து களுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், திருவண்ணா மலை, பெங்களூரு, ஓசூர், வேலூர் உள் ளிட்ட பல பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறையை தொடர்ந்து பணிக ளுக்கு செல்லவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்லும் வகையில் ஜன.20 ஆம் தேதி வரை 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளது. மேலும், கடந்த 5 நாட்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ.16 கோடியே 48 லட்சம் வசூலாகியுள்ளது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ரூ.15 கோடியே 95 லட்சம் வசூலா னது. கடந்தாண்டை காட்டிலும் ரூ.53 லட்சம் அதிகம் வருவாய் கிடைத்துள்ளது, என சேலம் கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.