1951 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் 72 ஆவது அமைப்பு தின விழா தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. எல்ஐசி ஊழியர்களின்உரிமைகளையும், எல்ஐசியையும் பாதுகாத்து வருவோம் என்கிற முழக்கத்தோடு நடைபெற்ற அமைப்பு தினத் தையொட்டி தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு கிளை தலை வர் செல்வகுமார் சங்க கொடியேற்றி வைத்தார். கோட்ட இணைச் செயலாளர் ஏ.மாதேஸ்வரன் சிறப்புரையாற்றினர். இதில், ஏராள மானோர் கலந்து கொண்டனர்.