ஈரோடு, நவ.20- குழந்தைகளை வளர்க்க பெற்றோ ருக்கு 7 கட்டளைகள் உள்ளன என புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா வில் திரைக்கலைஞர் ஜோ மல்லூரி உரையாற்றினார். ஈரோடு மாவட்டம், புஞ்சை புளி யம்பட்டி விடியல் சமூகநல அறக்கட் டளை சார்பில் 9 ஆவது ஆண்டு புத்த கத் திருவிழா கே.ஜி.மஹாலில் நடை பெற்று வருகிறது. இவ்விழாவில் சனி யன்று மாலை நடைபெற்ற கருத்தரங்க நிகழ்விற்கு ஸ்பிரிங்டல் பப்ளிக் பள்ளி யின் அறங்காவலர் குருசாமி தலைமை வகித்தார். விடியல் சமூக நல அறக் கட்டளை செயலாளர் ஜெயகாந்தன் வரவேற்றார். இதில் திரைக்கலைஞர், கவிஞர் ஜோ மல்லூரி கலந்து கொண்டு பேசுகையில், புஞ்சைபுளியம்பட்டி போன்ற சிறிய ஊரில் தொடர்ச்சியாக புத்தகத் திருவிழா நடத்தப்படுவது பாராட்டுக்குரியது. நினைத்தால் வருவ தல்ல கவிதை. ஆன்மாவின் வியர்வை தான் கவிதை. எப்படி குழந்தையை வளர்க்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களுக்கு ஏழு கட்டளைகள் உள்ளன. வருடத்துக்கு ஒரு முறை உங்கள் குழந்தைகளை ஆதரவற்ற அல்லது முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை மருத்துவம னைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை எங்கா வது பயணம் செய்ய வேண்டும்.
இரண்டு மாதத்திற்கு ஒரு முறை புத்த கத்தை பரிசளிக்க வேண்டும். ஒரு மாதத் துக்கு ஒரு முறை குழந்தைகள் மௌன விரதத்தை கடைபிடிக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை உங்கள் வீட்டு கழிப்பறையை அவர்களே சுத்தம் செய்ய வேண்டும். இந்த ஏழு கட்டளைகளை பெற்றோர் கள் குழந்தைகளுக்கு சொல்லி தந்தால் அவர்கள் வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம். அதேபோல குழந்தைகள் தாய், தந்தையை மதித்து நடக்க வேண்டும். பெற்றோர் தரும் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு, தோல்வி என்பது கற் றுக் கொள்வதற்கு. ஒவ்வொரு குழந் தையும் தாயின் முகத்தையும், தந்தை யின் பாதத்தையும் அடிக்கடி பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் கனவு, உழைப்பு, தியாகம் உங்களுக்கு புரியும். புத்தகத் திருவிழாக்களில் பெற் றோர்கள் நல்ல நூல்களை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி, அவர்களை ஞானமுள்ள மனிதனாக உருவாக்க வேண்டும், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கோவை புளியம்பட்டி அரிமா சங்க நிர் வாகி நந்தகுமார், ஸ்பிரிங்டல் பப்ளிக் பள்ளியின் இயக்குநர் கமல், முதல்வர் பிரபா, பட்டிமன்ற பேச்சாளர் சித்ரா சுப்பையன், காந்தி கல்லூரி விரிவுரை யாளர் கார்த்திகேயன், விடியல் அறக் கட்டளை தலைவர் வாணி தருமராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.